பதிவு செய்த நாள்
30 ஜன2012
09:29
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில்(9.07 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 95.94 புள்ளிகள் குறைந்து 17138.04 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 41.15 புள்ளிகள் குறைந்து 5163.55 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று சிறப்பாக இருந்தது. இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் நன்கு இருந்தது.அதேசமயம், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இது, இந்திய பங்குச் சந்தைகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வெள்ளியன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|