சிறிய நகரங்களை குறி வைக்கும் துரித உணவு நிறுவனங்கள்சிறிய நகரங்களை குறி வைக்கும் துரித உணவு நிறுவனங்கள் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ...
நறுமணப் பொருள்கள் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2012
12:39

புதுடில்லி: நறுமணப் பொருள்கள் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. 2000ம் ஆண்டு நிலவரப்படி நம் நாட்டில் ஒட்டுமொத்த அளவில் சுமார் 22.56 லட்சம் டன் நறுமணப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டன. கடந்த பத்து ஆண்டுகளில் உற்பத்தி மேலும் அமோக வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இந்தியாவின் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நறுமணப் பொருள்கள் பட்டியலில் மிளகாய், மிளகு, மஞ்சள், சீரகம், தனியா, வனிலா, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, பட்டை, ஏலம், இஞ்சி உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் இடம் பெறுகின்றன. இவற்றுள் பல மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாகவும் மாற்றப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் நறுமணப் பொருள்களுக்கு உலகம் முழுவதுமாக நல்ல வரவேற்பு உள்ளது.
சர்வதேச அளவில் நறுமணப் பொருள்கள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருந்து வரும் நிலையில் சீனா இரண்டாவது இடத்திலும் (5.85 லட்சம் டன்), இந்தோனேஷியா மூன்றாவது இடத்திலும் (2.61 லட்சம் டன்), பாகிஸ்தான் நான்காவது இடத்திலும் (2.08 லட்சம் டன்), நைஜீரியா ஐந்தாவது இடத்திலும் (1.46 லட்சம் டன்), எத்தியோப்பியா ஆறாவது இடத்திலும் (1.11 லட்சம் டன்), மெக்சிகோ ஏழாவது இடத்திலும் (91,755 டன்) உள்ளன. மற்ற நாடுகள் அனைத்துமாக ஆண்டுக்கு 1.05 லட்சம் டன் நறுமணப் பொருள்களை உற்பத்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, உலகின் மொத்த நறுமணப் பொருள்கள் உற்பத்தி ஏறக்குறைய 49 லட்சத்து 39 ஆயிரத்து 990 டன் என கணக்கிடப் பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)