பதிவு செய்த நாள்
30 ஜன2012
14:40
நாகர்கோவில்: கடும் பனிப்பொழிவால் கன்னியாகுமரியில் பூக்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைவால் விலையும் கடு்மையாக உயர்ந்துள்ளது. மல்லிகைப் பூ விலை அதிகரித்து கிலோ ரூ.1,500க்கு விற்பனையாகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை விடிய விடிய பனிப்பொழிவு காணப்படுகிறது. கத்தரி தோட்டங்களில் பிஞ்சு உற்பத்தி குறைந்துள்ளது. தோவாளை, ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், மாதவலாயம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூந்தோட்டங்களும பாதிக்கப்பட்டுள்ளன. உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் பிச்சி, மல்லிகை உள்ளிட்ட பூக்கள் விலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி தோவாளை மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1500 வரை விற்பனை செய்யப்பட்டது. பிச்சிப் பூ கிலோ ரூ.1000க்கு விற்பனையானது. அரளி ரூ.200க்கும், ஆரஞ்சி கேந்தி ரூ.40க்கும், மஞ்சள் கேந்தி ரூ.60க்கும் விற்கப்பட்டது. கோழிக்கொண்டை ரூ.40க்கும், ரோஜா பாக்கெட் ரூ.50க்கும் விற்கப்பட்டது. கொழுந்து கிலோ ரூ.120 ஆக இருந்தது. மல்லிகை தட்டுபாடு நிலவுகிறது. வெளிநாடுகளுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்வது குறைந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|