இந்தியா - சீனா வர்த்தகம்ரூ.3.70 லட்சம் கோடிஇந்தியா - சீனா வர்த்தகம்ரூ.3.70 லட்சம் கோடி ... கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடை செய்ய ஈரான் முடிவு கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடை செய்ய ஈரான் முடிவு ...
மருந்து பொருட்கள் ஏற்றுமதி ரூ.24,661 கோடியாக வளர்ச்சி:- பிசினஸ் ஸ்டாண்டர் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2012
01:52

நாட்டின் மருந்து பொருட்கள் ஏற்றுமதி, 24 ஆயிரத்து 661 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, மருந்து பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.இந்தியாவிலிருந்து, அடிப்படை மருந்து பொருட்கள், விற்பனைக்கான மருந்துகள், மருந்து தயாரிப்பிற்கான ரசாயணம் போன்றவை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ரஷ்யா நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், நாட்டின் மருந்து பொருட்கள் ஏற்றுமதி, 24 ஆயிரத்து 661 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 30 சதவீதம் (18 ஆயிரத்து 967 கோடி ரூபாய்) அதிகமாகும்.
நெருக்கடி நிலை:நடப்பு நிதியாண்டில், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்தியாவின் கைவினைப் பொருட்கள், கயிறு பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், கடல் உணவு பொருட்கள், நறுமணப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி சற்று குறைந்துள்ளது. இருப்பினும், மருந்து பொருட்கள் ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.உலக நாடுகள் :நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், நம் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு, 5,025 கோடி ரூபாய் மதிப்பிற்கு, மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 9.1 சதவீதம் (4,604 கோடி ரூபாய்) அதிகமாகும். டாலர் மதிப்பின் அடிப்படையில் இவற்றின் ஏற்றுமதி, 13.6 சதவீதம் வளர்ச்சிகண்டு, 120 கோடி டாலராக அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், இங்கிலாந்திற்கான ஏற்றுமதி, 26.2 சதவீதம் உயர்ந்து, 674 கோடி ரூபாயிலிருந்து, 850 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஜெர்மன் நாட்டிற்கான ஏற்றுமதி, 27.6 சதவீதம் அதிகரித்து, 604 கோடி ரூபாயிலிருந்து, 770 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவிற்கான ஏற்றுமதி, 37.7 சதவீதம் 525 கோடியிலிருந்து, 723 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஜப்பான் நாட்டிற்கான ஏற்றுமதி, 36.7 சதவீதம் வளர்ச்சிகண்டு, 779 கோடியிலிருந்து, 1,065 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், தென் ஆப்பிரிக்காவுக்கு, 677 கோடி ரூபாய்க்கு மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 12.8 சதவீதம் (600 கோடி ரூபாய்) அதிகமாகும்.கணக்கீட்டு காலத்தில், பிரேசிலுக்கான மருந்து பொருட்கள் ஏற்றுமதி, 14.7 சதவீதம் வளர்ச்சிகண்டு, 407 கோடி ரூபாயிலிருந்து, 467 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நைஜீரியாவிற்கு இவற்றின் ஏற்றுமதி, 19.5 சதவீதம் உயர்ந்து, 372 கோடி ரூபாயிலிருந்து, 444 கோடி ரூபாயாகவும், நெதர்லாந்து நாட்டிற்கான ஏற்றுமதி, 20.5 சதவீதம் வளர்ச்சிகண்டு, 345 கோடி ரூபாயிலிருந்து, 416 கோடி ரூபாயாகவும், கென்யாவிற்கான ஏற்றுமதி, 1.5 சதவீதம் அதிகரித்து, 390 கோடி ரூபாயிலிருந்து, 396 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
மேலும், வியட்நாம் நாட்டிற்கான மருந்து பொருட்கள் ஏற்றுமதி, 37.2 சதவீதம் அதிகரித்து, 257.20 கோடி ரூபாயிலிருந்து, 353 கோடி ரூபாயாகவும், கனடாவிற்கான ஏற்றுமதி, 30.4 சதவீதம் உயர்ந்து, 264 கோடி ரூபாயிலிருந்து, 344 கோடி ரூபாயாகவும், துருக்கி நாட்டிற்கான ஏற்றுமதி, 11.2 சதவீதம் வளர்ச்சியடைந்து, 307 கோடி ரூபாயிலிருந்து, 341 கோடி ரூபாயாகவும், ஸ்பெயின் நாட்டிற்கான ஏற்றுமதி, 56.2 சதவீதம் அதிகரித்து, 208 கோடி ரூபாயிலிருந்து, 325 கோடி ரூபாயாகவும், சிங்கப்பூருக்கான ஏற்றுமதி, 8 சதவீதம் உயர்ந்து, 265 கோடி ரூபாயிலிருந்து, 286 கோடி ரூபாயாகவும், பிரான்சிற்கான மருந்து பொருட்கள் ஏற்றுமதி, 21.5 சதவீதம் வளர்ச்சிகண்டு, 232 கோடி ரூபாயிலிருந்து, 282 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
விலை குறைவு:உலகின் பல நாடுகளில், விற்பனை செய்யப்படும் மருந்து பொருட்களின் விலை, இந்திய மருந்துகளோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவாகவும், தரமாகவும் இருப்பதால், பல நாடுகள் இந்திய மருந்துகளையே அதிகளவில் வாங்குகின்றன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு வீழ்ச்சியாலும், மருந்து பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.இதுகுறித்து இத்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "கடந்த 2010-11ம் நிதியாண்டில், குறைந்த அளவிலேயே மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது, இந்திய மருந்து பொருட்களுக்கு உலக நாடுகளில், அதிக தேவை காணப்படுவதால், நடப்பு முழு நிதியாண்டில் இவற்றின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்றார்.
முதலிடத்தில் அமெரிக்கா:இந்தியாவின் மொத்த மருந்து பொருட்கள் ஏற்றுமதில், அமெரிக்கா, 23.2 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து (3.9 சதவீதம்), ஜெர்மனி (3.5 சதவீதம்), ரஷ்யா (3.3 சதவீதம்), தென் ஆப்ரிக்கா (3.1 சதவீதம்), பிரேசில் (2.2 சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)