பதிவு செய்த நாள்
31 ஜன2012
09:16
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.07 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100.17 புள்ளிகள் அதிகரித்து 16963.47 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 62.95 புள்ளிகள் அதிகரித்து 5150.25 புள்ளிகளோடு காணப் பட்டது.:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கட்கிழமையன்று மோசமாக இருந்தது. ஜப்பான், ஹாங்காங், தென்கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில், பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. இந்நிலையில், லாப நோக்கம் கருதி, பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், இந்திய பங்குச் சந்தைகளிலும், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தது. ஐரோப்பிய நாடுகளிலும், பங்கு வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|