மருந்து பொருட்கள் ஏற்றுமதி ரூ.24,661 கோடியாக வளர்ச்சி:- பிசினஸ் ஸ்டாண்டர் உடன் இணைந்து -மருந்து பொருட்கள் ஏற்றுமதி ரூ.24,661 கோடியாக வளர்ச்சி:- பிசினஸ் ஸ்டாண்டர் ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு ...
கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடை செய்ய ஈரான் முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2012
10:43

லண்டன் : "சில நாடுகளுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி விரைவில் நிறுத்தப்படும்' என, ஈரான் எண்ணெய் அமைச்சர் கூறியுள்ளார். இந்நிலையில், ஈரானின் அணுசக்தி திட்டங்களை ஆய்வு செய்யும், ஐ.நா.,வின் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (ஐ.ஏ.இ.ஏ.,) குழுவினர் விரும்பினால், அவர்களது ஆய்வு நாட்கள் நீட்டிக்கப்படும் என, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள், அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படுகின்றன என்ற குற்றச்சாட்டின் பேரில், ஐ.ஏ.இ.ஏ., குழுவினர் மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் ஈரான் சென்றனர். அவர்களுக்கு முறைப்படி ஒத்துழைப்பு அளிப்பதாக ஈரான் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று எத்தியோப்பியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலேஹி, ஐ.ஏ.இ.ஏ., குழுவினர் விரும்பினால் அவர்கள் ஆய்வு செய்வதற்கான நாட்கள் நீட்டிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில், நேற்று அந்நாட்டு எண்ணெய் அமைச்சர் ருஸ்தம் கசேமி அளித்த பேட்டியில்,"சில நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய் நிறுத்தப்படும்' எனத் தெரிவித்தார். ஆனால், எந்த நாடுகள் என அவர் குறிப்பிடவில்லை. கடந்த 23ம் தேதி, ஐரோப்பிய யூனியன், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தது. அதன் பின், ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது.
அதேநேரம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா கண்காணிப்பு விமானம் ஒன்றை விரைவில் வெள்ளோட்டம் விடப் போவதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. இந்த விமானம், 5 கிலோ எடையுள்ள வெடிபொருட்களைத் தூக்கிக் கொண்டு, 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா நேற்று அளித்த பேட்டி ஒன்றில்,"அணு ஆயுதத் தயாரிப்பில் ஈரான் தொடர்ந்து ஈடுபட்டால், அதைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும்' என எச்சரித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)