காஸ் சிலிண்டர்' பதிவுக்கு எஸ்.எம்.எஸ்.,பயிற்சிகாஸ் சிலிண்டர்' பதிவுக்கு எஸ்.எம்.எஸ்.,பயிற்சி ... தோல் பொருள் ஏற்றுமதி ரூ.22,500கோடியை எட்டும் தோல் பொருள் ஏற்றுமதி ரூ.22,500கோடியை எட்டும் ...
முக்கிய எட்டு துறைகள் உற்பத்தி வளர்ச்சி 3.1 சதவீதமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2012
01:42

புதுடில்லி:சென்ற டிசம்பர் மாதத்தில், நாட்டின் முக்கிய எட்டுத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், 6.3 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது. நடப்பு நிதியாண்டின் நவம்பர் மாதத்தில் இத்துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 6.8 சதவீதமாக இருந்தது.
பொருளாதார வளர்ச்சி:அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார சுணக்க நிலை, நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டின் பணவீக்கம், அதிகரித்ததை அடுத்து ரிசர்வ் வங்கி, கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், 2011ம் ஆண்டு இறுதி வரை, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, 13 முறை உயர்த்தியது.
இதனால், வங்கி கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரித்தது. இதனால், தொழில் துறை நிறுவனங்கள், அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை, வங்கிகளிடமிருந்து பெற முடியாமல் போனது. வட்டி செலவினம் அதிகரிப்பால், பல தொழில் துறை நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சி பாதிப்புக்குள்ளானது. இருப்பினும், குறிப்பிட்ட சில துறைகளின் உற்பத்தி வளர்ச்சி நன்கு இருந்தது.
நாட்டின் தொழில் துறையில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை முக்கிய துறைகளாக விளங்குகின்றன. நாட்டின், தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடுவதில், மேற்கண்ட எட்டு துறைகளின் பங்களிப்பு, 37.9 சதவீதம் என்றளவில் உள்ளது.
மேற்கண்ட எட்டு துறைகளில், சென்ற டிசம்பர் மாதத்தில், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள், உருக்கு ஆகியவற்றின் உற்பத்தியில் ஏற்பட்ட மந்த நிலையால், ஒட்டுமொத்த முக்கிய எட்டுத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி குறைந்து போயுள்ளது. குறிப்பாக, சென்ற டிசம்பர் மாதத்தில், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகிய இரண்டு துறைகள் எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளன. அதேசமயம், நிலக்கரி, உரம், சிமென்ட், மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளது.
ஒன்பது மாதங்களில்நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், முக்கிய எட்டுத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 4.4 சதவீதம் என்றளவில் உள்ளது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில், 5.7 சதவீதம் என்றளவில் சற்று உயர்ந்து காணப்பட்டது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்ற டிசம்பர் மாதத்தில், நிலக்கரி உற்பத்தி, 5.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தில், 3.8 சதவீதமாக குறைந்து காணப்பட்டது.கச்சா எண்ணெய் உற்பத்தி, சென்ற டிசம்பர் மாதத்தில், -5.6 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது. ஆனால், கடந்த நிதியாண்டின் டிசம்பரில், இத்துறை, 15.8 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டிருந்தது.இதேபோன்று இயற்கை எரிவாயு துறையின் உற்பத்தி, -0.2 சதவீதம் என்றளவில் எதிர்மறை வளர்ச்சியை கண்டிருந்தது. இது, நடப்பாண்டு டிசம்பரில், -10.8 சதவீதம் என்றளவில் மேலும் பின்னடைவை கண்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, கடந்தாண்டு டிசம்பரில், 8.3 சதவீதம் என்றளவில் உயர்ந்திருந்தது.ஆனால்,நடப்பாண்டு டிசம்பரில் இந்த வளர்ச்சி,0.8 சதவீதம் என்றளவில் குறைந் துள்ளது.இதே மாதங்களில், உர துறையின் உற்பத்தி வளர்ச்சி, 0.3 சதவீதத்திலிருந்து, 0.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. உருக்குத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 9.4 சதவீதத்திலிருந்து, 2.4 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்நிலையில், சிமென்ட் துறையின் உற்பத்தி, கடந்தாண்டு டிசம்பரில், -2.2 சதவீதம் என்றளவில் எதிர்மறை வளர்ச்சியை கண்டிருந்தது. ஆனால், இத்துறையில், ஏற்பட்ட எழுச்சி காரணமாக, இதன் உற்பத்தி, நடப்பு நிதியாண்டின் டிசம்பர் மாதத்தில், 13.3 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இதே மாதங்களில், மின்சார துறையின் உற்பத்தி வளர்ச்சி, 5 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாக அதிகரித்துள்ளது என இந்த அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)