பதிவு செய்த நாள்
01 பிப்2012
09:46

சென்னை: நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 450 கோடி டாலரை (22 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) எட்டும் என, தோல் பொருட்கள் ஏற்றுமதி கூட்டமைப்பன் மண்டல தலைவர் (தெற்கு) அக்யூல் அகமது தெரிவித்தார். இது, 2010-11ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 27 சதவீதம் (350 கோடி டாலர்
- 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகம். நடப்பு நிதியாண்டில், 470 கோடி டாலர் மதிப்பற்கு, தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சுணக்க நிலை மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு குறைந்து போனது போன்றவற்றால், தோல் பொருட்கள் ஏற்றுமதியில்
பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, ரூபாயின் வெளி மதிப்பு சரி வால், மூலப்பொருட்களுக்கான இறக்குமதி செலவினம் அதிகரி த்தது. அமெரி க்கா மற்றும் ஐரோப்பய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால், இந்திய ஏற்றுமதியாளர்கள், புதிய சந்தைகளுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், தற்போது, பல நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பயுள்ளது. இதனால், இவற்றின் ஏற்றுமதி உயர வாய்ப்புள்ளது. வரும் 2016-17ம் நிதியாண்டில், 1,400 கோடி டாலர் மதிப்பற்கு ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நாட்டின் மொத்த தோல் பொருட்கள் ஏற்றும தியில், தோல் காலணிகளின் ஏற்றுமதி பங்களிப்பு, 40 சதவீதமாகவும், தோல் ஆடைகளின் பங்களிப்பு, 10 சதவீதம் என்றளவிலும் உள்ளது. 27வது, இந்திய சர்வதேச தோல்பொருட்கள் கண்காட்சி, நேற்று சென்னை வர்த்தக மையத்தில் துவங்கியது. இக்கண்காட்சி, வெள்ளிக் கிழமையுடன் நிறைவடைகிறது. இதற்காக நடைபெற்ற பத்திரி கையாளர் கூட்டத்தில், மேற்கண்ட தகவலைஅக்யூல் அகமது தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|