தோல் பொருள் ஏற்றுமதி ரூ.22,500கோடியை எட்டும்தோல் பொருள் ஏற்றுமதி ரூ.22,500கோடியை எட்டும் ... மொபைல் போன் கோபுரங்கள்: பி.எஸ்.என்.எல்., புது முடிவு மொபைல் போன் கோபுரங்கள்: பி.எஸ்.என்.எல்., புது முடிவு ...
இந்திய விமானப் படைக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கு 126 அதி நவீன போர் விமானங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2012
12:08

புதுடில்லி: பிரான்ஸ் நாட்டின், "டசால்ட் ஏவியேஷன் ராபல்' என்ற விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து, இந்திய விமானப் படை, 126 அதி நவீன போர் விமானங்களை வாங்கவுள்ளது. ராணுவ கொள்முதல் ஒப்பந்தங்களில், பிரமாண்டமான ஒன்றாகக் கருதப்படும் இந்த ஒப்பந்தம், 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானது.
சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில், இந்திய விமானப் படைக்கு, அதி நவீன போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக, சர்வதேச அளவில் பிரலமான போர் விமான தயாரிப்பு நிறுவனங்களை அணுகவும், முடிவு செய்யப்பட்டது. ரஷ்யாவின் மிக்-35, அமெரிக்காவின் எப்-பால்கான், போயிங் எப்-18 ஹார்னட், ஸ்வீடனின் சாப் கிரீபன், ஐரோப்பாவின் டைபூன் மற்றும் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் ராபல் ஆகிய விமான தயாரிப்பு நிறுவனங்கள், இந்திய விமானப் படைக்குத் தேவையான விமானங்களை வழங்க முன்வந்தன. ஏலத்தின் மூலம், விமான நிறுவனத்தை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்தாண்டு, இது தொடர்பான டைபூன் மற்றும் ராபல் ஆகிய நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டன. இதில், ஏதாவது ஒரு நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு, ஏலம் நடத்தவும் திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், இதற்கான ஏலத்தில் குறைந்த விலையை குறிப்பிட்ட ராபல் நிறுவனம், தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்றாலும், அடுத்த ஆண்டில் தான் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. 50 ஆயிரம் கோடி ரூபாய்: இந்த ஒப்பந்தப்படி, இந்திய விமானப் படைக்கு, 126 அதி நவீன போர் விமானங்களை, ராபல் நிறுவனம், அடுத்த பத்தாண்டுகளில் வழங்கும். இந்த ஒப்பந்தம், 50 ஆயிரம் கோடி மதிப்பிலானது. முதல் கட்டமாக, 18 விமானங்களை, ராபல் நிறுவனமே தயாரித்து வழங்கும் என்றும், மீதமுள்ள விமானங்களை, இந்திய நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்து வழங்கும் என்றும், தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப் பெரிய ராணுவ கொள்முதல் ஒப்பந்தங்களில் ஒன்றாக, இது கருதப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)