இந்திய விமானப் படைக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கு 126 அதி நவீன போர் விமானங்கள்இந்திய விமானப் படைக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கு 126 அதி நவீன போர் விமானங்கள் ... தங்கம் விலை சற்று உயர்வு தங்கம் விலை சற்று உயர்வு ...
மொபைல் போன் கோபுரங்கள்: பி.எஸ்.என்.எல்., புது முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2012
13:29

நஷ்டத்தை ஈடு செய்வதற்காக, மொபைல் போன் கோபுரங்களை, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் முடிவு செய்துள்ளது.நஷ்டத்தை ஈடு கட்ட:பி.எஸ்.என்.எல்., நிறுவனம், நாடு முழுவதும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொபைல் போன் கோபுரங்களையும், தமிழக அளவில், 8,754 கோபுரங்களையும் நிறுவி உள்ளது.இவற்றின் அமைப்பு மற்றும் பராமரிப்பிற்காக, வருவாயில், 30 சதவீதம் வரை, இந்நிர்வாகம் செலவிடுகிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டும், நஷ்டத்தை ஈடு செய்யும் வகையிலும், நடப்பு நிதியாண்டிற்குள், மொபைல் போன் கோபுரங்களை, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஒப்பந்தம்: இதற்காக, டாடா டெலி சர்வீசஸ், வீடியோகான் டெலி கம்யூனிகேஷன்ஸ், எடிசாலட் டி.பி., டெலிகாம் சர்வீசஸ், பார்தி ஏர்டெல், ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுடன், பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.ஒரு மொபைல் போன் கோபுரம் அமைந்துள்ள இடம், அதைப் பகிர்ந்து கொள்ளும் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்து, மாதத்திற்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
"வருவாய் அதிகரிக்கும்': இதன் மூலம், அடுத்த நிதியாண்டில், தன் வருவாயில், 1,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்க, பி.எஸ்.எல்.என்., நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம், 2009-10ம் நிதியாண்டில், 1,823 கோடி ரூபாயும், கடந்த நிதியாண்டில், 6,000 கோடி ரூபாயும், நஷ்டத்தை சந்தித்துள்ளது. பெயர் வெளியிட விரும்பாத, பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் கூறுகையில், ""பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தின், தாமதமான இம்முடிவு வரவேற்கத்தக்கது. இதன்மூலம், மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, "சிக்னல்' பிரச்னை எதுவும் ஏற்படாது. மாறாக, பி.எஸ்.என்.எல்., வருவாய் அதிகரிக்கும்'' என்றார்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)