மாரிக்கோ நிறுவனம்நிகர லாபம் ரூ.84 கோடி மாரிக்கோ நிறுவனம்நிகர லாபம் ரூ.84 கோடி ... ரயில்வே ரூ.9,000 கோடி திட்டச் செலவை குறைக்கிறது -பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து- ரயில்வே ரூ.9,000 கோடி திட்டச் செலவை குறைக்கிறது -பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் ... ...
நடப்பு 2011-12ம் நிதியாண்டில் உணவு தானியங்கள் உற்பத்தி 25 கோடி டன்னாக அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2012
00:11

புதுடில்லி: நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த தானியங்கள் உற்பத்தி, 25.04 கோடி டன்னாக அதிகரிக்கும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.நாட்டின் பல மாநிலங்களில், நடப்பாண்டில், இதுவரை நல்ல மழைப் பொழிவும், சாதகமான பருவ நிலையும் நிலவுகிறது. இதனால், நெல், கோதுமை உள்ளிட்ட தானியங்கள் உற்பத்தி சிறப்பான அளவில் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மொத்த தானியங்கள் உற்பத்தியில், நெல் உற்பத்தி, இதுவரை இல்லாத அளவிற்கு, 10.28 கோடி டன்னாகவும், கோதுமை உற்பத்தி, 8.83 கோடி டன்னாகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி, 23.21 கோடி டன்னாக இருந்தது. ஆக, நடப்பு நிதியாண்டில், தானியங்கள் உற்பத்தி, முந்தைய நிதியாண்டை விட, 1.84 கோடி டன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பருப்பு வகைகள் உற்பத்தி, 1.73 கோடி டன்னாகவும், பருத்தி உற்பத்தி, 3.41 கோடி பொதிகள் (1 பொதி- 170 கிலோ) என்ற அளவிலும் வளர்ச்சிகாணும். மேலும், இதர வகை தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகள் உற்பத்தியும் முறையே, 1.73 கோடி டன் மற்றும் 3.05 கோடி டன் என்ற அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவைதவிர, கரும்பு உற்பத்தியும், கடந்த ஆண்டை விட, 50.90 லட்சம் டன் அதிகரித்து, 34.79 கோடி டன்னாக அதிகரிக்கும் என மத்திய அரசின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)