பதிவு செய்த நாள்
05 பிப்2012
03:16

மும்பை : நாட்டின், அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற ஜனவரி, 27ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 67.30 கோடி டாலர் (3,365 கோடி ரூபாய்) உயர்ந்து, 29 ஆயிரத்து 390 கோடி டாலராக (14 லட்சத்து 69 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 73 கோடி டாலர் அதிகரித்து, 29 ஆயிரத்து 326 கோடி டாலராக (14 லட்சத்து 66 ஆயிரத்து 300 கோடி ரூபாய்) இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதே வாரத்தில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 61.40 கோடி டாலர் (3,070 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.
மேலும், எஸ்.டீ.ஆர்.மதிப்பு மற்றும் சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு முறையே, 3.68 கோடி டாலர் (184 கோடி ரூபாய்) மற்றும் 2.25 கோடி டாலர் (112.50 கோடி ரூபாய்)உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|