வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 6.81 லட்சமாக அதிகரிப்புவெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 6.81 லட்சமாக அதிகரிப்பு ... தங்கம் இறக்குமதி ரூ.5 லட்சம் கோடியை தாண்டும் தங்கம் இறக்குமதி ரூ.5 லட்சம் கோடியை தாண்டும் ...
எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.36,900 கோடி மானியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2012
00:27

புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, 36,894 கோடி ரூபாய் மானியம் வழங்குமாறு, ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா மற்றும் கெயில் இந்தியா நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள், அடக்க விலைக்கும் குறைவாக டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்குகின்றன. இதனால், இந்நிறுவனங்களுக்கு நடப்பு நிதியாண்டின், கடந்த டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் 97 ஆயிரத்து 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில், 37.91 சதவீதத்தை (36 ஆயிரத்து 894 கோடி ரூபாய்) உள்நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா, கெயில் இந்தியா ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் மானியமாக வழங்குமாறு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் - டிசம்பர் வரைக்குமான இந்த மானியத் தொகையில், ஓ.என்.ஜி.சி., அதன் பங்காக 30 ஆயிரத்து 296 கோடி ரூபாயை வழங்கும். இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தைவிட 42.3 சதவீதம் அதிகமாகும்.
இதே காலத்திற்கு, ஆயில் இந்தியா நிறுவனம், 4.478 கோடி ரூபாய் (1,597 கோடி ரூபாய்) மானியமாக வழங்கும்.
கெயில் இந்தியா நிறுவனத்தின் மானியப் பங்களிப்பு, 2.120 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை, மத்திய அரசு, சென்ற ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான ஆறுமாத காலத்திற்கு, மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்கியுள்ளது. மூன்றாவது காலாண்டிற்கான மானியம், இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)