தங்கம் இறக்குமதி ரூ.5 லட்சம் கோடியை தாண்டும்தங்கம் இறக்குமதி ரூ.5 லட்சம் கோடியை தாண்டும் ... சரக்கை கையாள்வதில் வ.உ.சி துறைமுகம் சாதனை சரக்கை கையாள்வதில் வ.உ.சி துறைமுகம் சாதனை ...
முட்டைக் கோழி விலை வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2012
00:29

நாமக்கல் : நாமக்கல் மண்டலத்தில், 800 கோழிப்பண்ணைகள் அமைந்துள்ளன. அதன் மூலம் நாள்தோறும், மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், சத்துணவு திட்டம், கேரள மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
கோழிப்பண்ணைகளில், முட்டை உற்பத்திக்காக, 16 முதல், 18 வார வயதுடைய கோழிகள் விடப்படுகின்றன. அந்தக் கோழிகள் தொடர்ந்து ஒன்றரை ஆண்டு வரை முட்டைகளை உற்பத்தி செய்கின்றன. ஒரு கோழி சராசரியாக, 320 முட்டைகள் இடுகிறது. ஒன்றரை ஆண்டுக்கு பின், கோழிகள் இடும் முட்டைகளின் எண்ணிக்கை குறைகிறது.
எனவே, அவை இறைச்சிக்கு அனுப்பப்படுகின்றன. குறிப்பாக, முட்டைக் கோழிகள், கேரளாவுக்கு அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. முட்டைக் கோழி இறைச்சி அடர்த்தியாக இருப்பதால், பிரியாணி உணவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதனால், இந்த இறைச்சியின் விலை உச்சத்தில் இருக்கும்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 18ம் தேதி முதல், முட்டைக் கோழி இறைச்சி விலை, சரிவடைந்து வருகிறது. 46 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ முட்டைக் கோழி, பிப்ரவரி 2ம் தேதி நிலவரப்படி, 29 ரூபாயாக சரிவடைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, கோழிப் பண்ணைத் துறையினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவர் (நாமக்கல் மண்டலம்) செல்வராஜ் கூறுகையில், ""முட்டை யின் விலை குறைந்து வருகிறது. அதனால், பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாக முட்டைக் கோழியின் விலை சரிந்து வருகிறது,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)