முட்டைக் கோழி விலை வீழ்ச்சிமுட்டைக் கோழி விலை வீழ்ச்சி ... வருமான வரி விலக்கு வரம்பு ரூ.2 லட்சமாக உயர்கிறது வருமான வரி விலக்கு வரம்பு ரூ.2 லட்சமாக உயர்கிறது ...
சரக்கை கையாள்வதில் வ.உ.சி துறைமுகம் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2012
00:32

புதுடில்லி : தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம், நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி 3ம் தேதி வரையிலான காலத்தில், சாதனை அளவாக, 2.36 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது, சென்ற 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில் கையாளப்பட்ட சரக்குகளை விட, 13.87 சதவீதம் (2.02கோடி டன்) அதிகமாகும்.
நடப்பு நிதியாண்டின், பிப்ரவரி 4ம் தேதி வரையிலான காலத்தில் இந்த துறைமுகம், 4 லட்சத்து 723 சரக்கு பெட்டகங்களை கையாண்டுள்ளது. மதிப்பீட்டு காலத்தில், இத்துறைமுகம் அதிக அளவில் இறக்குமதியை மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக, உரங்கள், உர மூலப்பொருள்கள், தமிழ்நாடு மின் வாரியத்திற்கான நிலக்கரி , முந்திரிக் கொட்டைகள், இயந்திரங்கள், சுண்ணாம்புக் கல், இரும்பு மற்றும் உருக்குப் பொருட்கள், ஜிப்சம், திரவ அமோனியா மற்றும் நாப்தா, சமையல் எரிவாயு, டீசல், பாமாயில் உள்ளிட்டவை அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இதே காலத்தில் மக்காச்சோளம், அரிசி, கிரானைட் கற்கள், சர்க்கரை, கட்டுமான பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் ஏராளமான இலகு ரகப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கப்பல் போக்குவரத்து அமைச்சகம், நடப்பு நிதியாண்டில், வ.உ.சி. துறைமுகம், 2.6 கோடி டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்துறைமுகம், இந்த இலக்கைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் முக்கிய துறைமுகங்களில், 10ம் இடத்தில் உள்ள வ.உ.சி துறைமுகம், அதிக அளவில் சரக்குகளை கையாண்டு வருகிறது. இதனையடுத்து, இத்துறைமுகத்தின் எட்டாவது கப்பல் தளத்தை, சரக்கு பெட்டக முனையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், இத்துறைமுகத்தின் இரண்டாவது சரக்கு பெட்டக முனையமாக இது உருவெடுக்கும். 335 கோடி ரூபாய் திட்டச் செலவில் மேற்கொள்ளப்பட உள்ள இப்பணிகள், விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)