பதிவு செய்த நாள்
09 பிப்2012
02:14
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், ரயில்வே துறையின் வருவாய், 84 ஆயிரத்து 155 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 10.41 சதவீதம் (76 ஆயிரத்து 223 கோடி ரூபாய்) அதிகமாகும்.
மதிப்பீட்டு காலத்தில், சரக்குகள் கையாண்டதன் மூலம் கிடைத்த வருவாய், 10.47 சதவீதம் வளர்ச்சி கண்டு, 50 ஆயிரத்து 916 கோடியிலிருந்து, 56 ஆயிரத்து 247 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பயணிகள் ரயில் போக்குவரத்து மூலம் கிடைத்த வருவாய், 9.41 சதவீதம் வளர்ச்சியடைந்து, 21 ஆயிரத்து 337 கோடியிலிருந்து, 23 ஆயிரத்து 345 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதர வகையிலான போக்குவரத்தின் வருவாய், 12.42 சதவீதம் அதிகரித்து, 2,094 கோடியிலிருந்து, 2,353 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.முன்பதிவு செய்து பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை, 5.09 சதவீதம் வளர்ச்சி கண்டு, 657.71 கோடியிலிருந்து, 691 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|