பதிவு செய்த நாள்
09 பிப்2012
02:21
சென்னை:சென்ற 2011ம் ஆண்டு, இந்தியாவில் மொபைல் போன் விற்பனை 14.1 சதவீதம் அதிகரித்து, 18.20 கோடியாக உயர்ந்துள்ளது.மொபைல் போன் விற்பனையில், நோக்கியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், உள்நாடு மற்றும் சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவில் 2011-17ம் ஆண்டுகளில், மொபைல் போன் சந்தை, ஆண்டுக்கணக்கில் 10.7 சதவீதம் வளர்ச்சியடைந்து, 2017ம் ஆண்டு 33.50 கோடி சாதனங்களாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.சர்வதேச அளவில், சென்ற 2011ம் ஆண்டு டிசம்பருடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், ஸ்மார்ட் போன் விற்பனை, 54 சதவீதம் (10.20 கோடி போன்) அதிகரித்து 15.78 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்ற 2011ம் முழு ஆண்டில், ஸ்மார்ட் போன் விற்பனை, 61.3 சதவீதம் (30.47 கோடி போன்) அதிகரித்து 49.14 கோடியாக உயர்ந்துள்ளது. ஸ்மார்ட் போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனம், 23.5 சதவீத பங்களிப்புடன், முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் சாம்சங் (22.8 சதவீதம்), நோக்கியா (12.4 சதவீதம்), ரிசர்ச் இன் மோஷன் (8.2 சதவீதம்), எச்.டி.சி.(6.5 சதவீதம்) ஆகியவை உள்ளன.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|