பதிவு செய்த நாள்
09 பிப்2012
02:23
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் புதன்கிழமையன்று, அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தை ஏற்றம் கண்டது.
நேற்றைய வர்த்தகத்தில், வரும் நிதியாண்டில், இந்தியாவில், ஐ.டி. பீ.பி.ஓ., துறைகளின் வருவாய் 11-14 சதவீதம் அதிகரித்து, 7,600-7,800 கோடி டாலராக உயரும் என்ற நாஸ்காம் அமைப்பின் செய்தி வெளியானதையடுத்து, தகவல் தொழில்நுட்ப பங்குகளின் விலை அதிகரித்தது. இது தவிர, ரியல் எஸ்டேட், உலோகம், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், எண்ணெய், எரிவாயு, மருந்து, உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 84.87 புள்ளிகள் அதிகரித்து, 17,707.32 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,809.21 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,579.59 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.
தேசியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 33 புள்ளிகள் உயர்ந்து, 5,368.15 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,396.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,325.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|