பிஸ்கட் தயாரிக்க பயன்படும் அவரை விதை விலை வீழ்ச்சிபிஸ்கட் தயாரிக்க பயன்படும் அவரை விதை விலை வீழ்ச்சி ... சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 7 சதவீதம் வளர்ச்சி சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 7 சதவீதம் வளர்ச்சி ...
சீரிய வளர்ச்சியில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2012
00:08

புதுடில்லி: நாட்டில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 17 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, ஏற்றுமதி மேம்பாட்டு குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவில், 584 சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில், அனுமதி வழங்கப்பட்ட, 381 சிறப்பு பொருளாதார மண்டலங்களில், தற்போது, 148 மண்டலங்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், இம்மண்டலங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 2 லட்சத்து 60 ஆயிரத்து 973 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 17 சதவீதம் (2 லட்சத்து 23 ஆயிரத்து 132 கோடி ரூபாய்) அதிகம்.
சென்ற 2010-11ம் முழு நிதியாண்டில், இம்மண்டலங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 43.1 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3 லட்சத்து 15 ஆயிரத்து 868 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.
சென்ற டிசம்பர் மாதம் வரையிலுமாக, சிறப்பு பொருளாதார மண்டலங்களில், 2 லட்சத்து 49 ஆயிரத்து 631 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 8 லட்சத்து 15 ஆயிரத்து 308 பேர் நேரடி வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.சென்ற நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த ஏற்றுமதியில், சிறப்பு பொருளாதார மண்டலங்களின் பங்களிப்பு, 34 சதவீதமாக உள்ளது.மத்திய அரசு, சிறப்பு பொருளாதார மண்டங்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. எனினும், இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மாற்று வரி (மேட்) காரணமாக, முதலீடுகள் குறைந்துள்ளன. இந்த வரிச்சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஏற்றுமதி மேம்பாட்டு குழு, மத்திய நிதியமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)