பதிவு செய்த நாள்
10 பிப்2012
09:22
மும்பை: இந்திய பங்குச்சந்தை வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.14 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13.16 புள்ளிகள் குறைந்து 17817.59 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 15.55 புள்ளிகள் குறைந்து 5399.80 புள்ளிகளோடு காணப் பட்டது. நேற்று கிரீஸ் நாட்டு கடன் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் சூழல் உருவானதால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், உலோகம், வங்கி உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. எண்ணெய், எரிவாயு, பொறியியல், ஆரோக்கிய பராமரிப்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|