ரூ.800 கோடிக்கு கைமாறியது நியூமரிக்கின் யு.பி.எஸ்., தொழில்!ரூ.800 கோடிக்கு கைமாறியது நியூமரிக்கின் யு.பி.எஸ்., தொழில்! ... எதிஹாட் ஏர்வேஸ் வருவாய் 14 கோடி டாலராக உயர்வு எதிஹாட் ஏர்வேஸ் வருவாய் 14 கோடி டாலராக உயர்வு ...
சிவகாசியில் மின் தடையால் பாடப் புத்தகம் அச்சிடுவதில் சிக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2012
04:48

சிவகாசி : சிவகாசியில் தொடரும் மின்தடையால், பாடப் புத்தகங்கள் அச்சிடுவதில் சிக்கல் ஏற்பட்டு, தினமும் 3 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுகிறது. சிவகாசியில் பிரிண்டிங் தொழிலில், 600க்கும் மேற்பட்ட அச்சகங்கள் செயல்படுகின்றன. இத் தொழிலில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
இங்குள்ள 40 அச்சகங்களில், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திற்கு தேவையான பள்ளி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணியும் நடைபெறுகிறது. சமச்சீர் பாடப் புத்தகங்கள் அச்சிடுவதில் ஏற்பட்ட நெருக்கடியால், வரும் கல்வி ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் ஆர்டர்கள், தாமதமாகக் கிடைத்து வருகின்றன.
ஆர்டர் பெற்ற 30 முதல் 35 நாட்களுக்குள் அச்சிடுதல், பைண்டிங் பணி முடித்து, உரிய நாளில் ஒப்படைக்க வேண்டும். குறிப்பிட்டபடி பணி முடிக்காவிட்டால், அச்சக உரிமையாளரிடம் தினம் அபராதம் வசூலிக்கப்படும்.
தற்போது, சிவகாசியில் காலையில் இருந்தே மின் தடை தொடர்கிறது. காலை 9 -12 , பிற்பகல் 2-4 மணி, மாலை 6 - 7.30 , இரவு 8.30- 9.30 மணி என , தினம் எட்டு மணிநேரம் மின்தடை ஏற்படுகிறது. இதனால், அச்சுத் தொழில் முடங்கி உள்ளது .
குறிப்பிட்ட சில பெரிய நிறுவனங்களால் தான், ஜெனரேட்டரைப் பயன்படுத்தி, உற்பத்தி செய்ய முடிகிறது. மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.5 செலவு என்றால், ஜெனரேட்டரை பயன்படுத்தி உற்பத்தி செய்தால், ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.12 செலவாகிறது. ஜெனரேட்டர் பயன்படுத்துவதால், 120 மடங்கு கூடுதல் செலவாகிறது.
பெரிய நிறுவனங்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி பிரிண்டிங் செய்து, முடித்தால், இதர பணிகளான லேமினேசன், பிளேட் மேக்கிங், ஸ்கொயரிங் போன்ற பணிகளுக்கு, வெளியில் கொண்டு செல்லும்போது, மின்தடையால் பணியை முடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். 8 மணிநேர மின்தடையால், சிவகாசியில் தினம் 3 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. தொழிலாளர்கள் வேலை இழப்பும் தவிர்க்க முடியாததாகி வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)