10 மாதங்களில் ரயில்வே துறை வருவாய் ரூ.84,155 கோடியாக உயர்வு10 மாதங்களில் ரயில்வே துறை வருவாய் ரூ.84,155 கோடியாக உயர்வு ... தங்கம் விலையில் மாற்றம் இல்லை தங்கம் விலையில் மாற்றம் இல்லை ...
கோடை துவங்க உள்ளதால் மாடுகளின் விலை வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2012
12:32

கோபிசெட்டிபாளையம்:கோடை துவக்கம் காரணமாக கோபி மொடச்சூர் மாட்டு சந்தையில் மாடுகளில் விலை வீழ்ச்சியடைய துவங்கி உள்ளது.கோபி மொடச்சூரில் வாரந்தோறும் சனிக்கிழமை மாட்டு சந்தை நடக்கிறது. கோபி, சத்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜெர்சி, கொங்கன் மற்றும் எருமை மாட்டில் முரா, நாட்டு கிராஸ் ஆகிய ரகங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. பல்வேறு பகுதி வியாபாரிகள் மாடு வாங்கி செல்கின்றனர்.தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கோடை வெயிலால் பல்வேறு பகுதிகளிலும் தீவனத்தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாட்டு தீவனங்களான புண்ணாக்கு, சோளம், கேழ்வரகு, புல் விலைகளும் உயர்ந்து வருகின்றன.

தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், நிலம் இல்லாமல் வீடுகளில் மாடு வளர்ப்பவர்கள் தீவனம் வாங்க முடியாமல் மாடுகளை விற்க துவங்கி உள்ளனர். நிலங்கள் வைத்துள்ளவர்கள் மட்டும் ஒரு சிலர் தங்கள் மாடுகளை பராமரிக்கின்றனர். கோடை நெருங்குவதால் மாடுகளின் விலை வீழ்ச்சியடைய துவங்கி உள்ளது.சென்ற வாரம் சந்தையில் ஜெர்சி இன மாடு, 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை, கன்று குட்டி பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை, இறைச்சி மாடு, பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் விற்கப்பட்டது. கலப்பின மாடு, 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய், கன்று குட்டி, 5,000 முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது.கொங்கன் இன மாடு, 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை, கன்று குட்டி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை, இறைச்சி மாடு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை, எருமை மாடு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது.சென்ற சில வாரங்களுக்கு முன் மாடுகளில் விலை, 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. சென்ற வாரம் விலை சரிந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)