தங்கம் விலையில் மாற்றம் இல்லைதங்கம் விலையில் மாற்றம் இல்லை ... கைவினை பொருட்கள் ஏற்றுமதி 24 சதவீதம் வளர்ச்சி கைவினை பொருட்கள் ஏற்றுமதி 24 சதவீதம் வளர்ச்சி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வீட்டுக் கடன்களுக்கான வரி தள்ளுபடி ரூ.3 லட்சமாக உயர்த்த தீவிர பரிசீலனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2012
14:21

புதுடில்லி:வீட்டுக் கடன்களுக்கான வட்டி மீதான வரித் தள்ளுபடி வரம்பை தற்போதுள்ள 1.5 லட்சத்திலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. வீட்டு வசதித் துறையை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தற்போது வீட்டுக் கடன் பெற்றுள்ளவர்கள், அந்த கடன்களுக்காக செலுத்தும் வட்டியில் 1.5 லட்சம் ரூபாய் வரை வரித் தள்ளுபடி சலுகை பெறலாம். இது தவிர, அசலாகச் செலுத்தும் தொகையிலும் 1 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு வரிச் சலுகை பெறலாம். தற்போது ஒவ்வொரு ஆண்டும், சொத்துக்களின் விலையும், வட்டி வீதமும் மாறிக் கொண்டே இருப்பதால், இந்த வரித் தள்ளுபடி வரம்பை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
"வீட்டுக் கடன்களுக்கான வரித் தள்ளுபடி வரம்பை அதிகரிக்க வேண்டும்' என, தொழில் நிறுவனச் சங்கங்களும் கேட்டுக் கொண்டுள்ளன. "அதாவது வீட்டுக் கடன்களுக்கான வட்டி மீதான வரித் தள்ளுபடி வரம்பை 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்' என, இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், இந்திய தொழில் சம்மேளனமோ, "வீட்டுக் கடன்களுக்காக வரித் தள்ளுபடி வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்' என, மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது, வீட்டுக் கடன் வட்டி மீதான வரித் தள்ளுபடி சலுகை வரம்பை, 3 லட்சமாகவும், அசலுக்கான வரித் தள்ளுபடி வரம்பை 2 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்க வேண்டும் என, கோரியுள்ளது.
அதனால், வீட்டுக் கடன்களுக்கான வட்டி மீதான வரித் தள்ளுபடி வரம்பை 3 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. வரக்கூடிய பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)