கைவினை பொருட்கள் ஏற்றுமதி 24 சதவீதம் வளர்ச்சிகைவினை பொருட்கள் ஏற்றுமதி 24 சதவீதம் வளர்ச்சி ... காதலர் தின கொண்டாட்டம் : ஒரு சிவப்பு ரோஜா விலை ரூ.300 காதலர் தின கொண்டாட்டம் : ஒரு சிவப்பு ரோஜா விலை ரூ.300 ...
பெட்ரோகெமிக்கல் துறையில் வேலைவாய்ப்பு:"அசோசெம்' அமைப்பு மதிப்பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2012
01:47

புதுடில்லி:இந்தியாவில், அடுத்த ஐந்தாண்டுகளில், பெட்ரோகெமிக்கல் தொழில் துறை மூலம் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாக, "அசோசெம்' அமைப்பு மதிப்பிட்டுள்ளது.இந்தியாவில், பெட்ரோலிய பொருட்களோடு தொடர்புடைய, பெட்ரோகெமிக்கல் தொழில் துறை, ஆண்டுதோறும், 12-15 சதவீதம் என்றளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. இத்துறையில், அடுத்த ஐந்தாண்டுகளில், 4,000 கோடி டாலர் (2 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.
பெட்ரோகெமிக்கல் தொழில் துறையில் முதலீடு செய்வதற்கு, அதிக நிதி தேவைப்பட்டாலும், பல முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்வதற்கு தயார் நிலையில் உள்ளனர். இத்துறையில், இந்தியாவிற்கு கடும் போட்டியாக, சீனா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள் உள்ளன.
இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நாடு முழுவதும் பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல் முதலீட்டு மண்டலங்களை அமைக்க முடிவு செய்தது. இதன்படி, குஜராத்தில் தாஹேஜ், மேற்குவங்கத்தில் ஹால்டியா, ஒடிசாவில் பரதீப், ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினம் ஆகிய நான்கு இடங்களில், இவ்வகை மண்டலங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், கடலூரில் இது போன்ற மண்டலத்தை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. மேலும், கர்நாடகாவின் மங்களூரிலும், இதுபோன்ற மண்டலத்தை அமைப்பதற்கான திட்டம் துவக்கத்தில் உள்ளது.
ஆந்திர முதலீட்டு மண்டலத்தில், இது போன்ற தொழிற்சாலைகளை அமைக்க இந்துஸ்தான் பெட்ரோலியம், எல்.ஜி.பாலிமர், கோரமண்டல் பெர்டிலைசர், ஆந்திரா பெட்ரோகெமிக்கல்ஸ்,கோதாவரி பெர்டிலைசர் அண்டு கெமிக்கல்ஸ், நாகார்ஜூனா பெர்டிலைசர் அண்டு கெமிக்கல்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.கடந்த 2010ல், சர்வதேச அளவில், 2.50 லட்சம் கோடி டாலர் மதிப்பிற்கு, பெட்ரோ ரசாயனப் பொருட்கள் விற்பனையாகியுள்ளன. வரும் 2020ல், ரசாயனத் துறையில் மூன்றில் ஒரு பங்கு வர்த்தகத்தை, ஆசிய நாடுகள் கொண்டிருக்கும் என, அந்த ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)