பதிவு செய்த நாள்
14 பிப்2012
01:50

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று நன்கு இருந்தது. கிரீஸ் நாட்டு கடன் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அந்நாட்டு அரசு, சிக்கன நடவடிக்கை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் வங்கி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
இருப்பினும், பொறியியல், நுகர் பொருட்கள், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 24.15 புள்ளிகள் அதிகரித்து, 17,772.84 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,849.64 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,665.89 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 19 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 8.60 புள்ளிகள் உயர்ந்து, 5,390.20 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,421.05 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,351.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|