நாட்டின் பணவீக்கம் 6.55 சதவீதமாக குறைந்ததுநாட்டின் பணவீக்கம் 6.55 சதவீதமாக குறைந்தது ... பாஸ்போர்ட் சேவை: மேலும் 3 பிரிவினருக்கு விதிமுறையில் தளர்வு பாஸ்போர்ட் சேவை: மேலும் 3 பிரிவினருக்கு விதிமுறையில் தளர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ரப்பர் உற்பத்தி 1 லட்சம் டன்னாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2012
02:30

கொச்சி:நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி, சென்ற ஜனவரி மாதத்தில், 3.7 சதவீதம் அதிகரித்துள்ளது என, ரப்பர் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற ஜனவரி மாதத்தில், இயற்கை ரப்பர் உற்பத்தி, தற்காலிக புள்ளி விவரத்தின்படி, 1 லட்சத்து 2,500 டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட,3.7 சதவீதம் (98 ஆயிரத்து 800 டன்) அதிகம். ரப்பர் பால் வடிப்பு:குளிர் காலம் என்பதால், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், ரப்பர் பால் வடிப்பு அதிகரிக் கும். இதனால், இவ்விரு மாதங்களில், இயற்கை ரப்பர் உற்பத்தி, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. சென்ற டிசம்பர் மாதத்தில், இயற்கை ரப்பர் உற்பத்தி, முன்கூட்டிய மதிப்பீட்டைவிட, 2,800 டன் அதிகரித்து, 1 லட்சத்து 4,000 டன்னில் இருந்து, 1 லட்சத்து 6,800 டன்னாக அதிகரித்திருந்தது. அதேசமயம், நடப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், இயற்கை ரப்பர் உற்பத்தி, முறையே 61 ஆயிரம் மற்றும் 59 ஆயிரம் டன்னாக குறையும் என்றும், பருவ மழை துவங்கும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், இதன் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக, கோடை காலங்களில், ரப்பர் உற்பத்தி குறைந்த அளவிலேயே இருக்கும். நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், ரப்பர் உற்பத்தி, தற்காலிக புள்ளி விவரத்தின்படி, 7 லட்சத்து 84 ஆயிரத்து 400 டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியைவிட, 4.6 சதவீதம் (7 லட்சத்து 49 ஆயிரத்து 950 டன்) அதிகம். பயன்பாடு:சென்ற ஜனவரி மாதத்தில், இயற்கை ரப்பர் பயன்பாடு, 82 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 1.23 சதவீதம் (81 ஆயிரம் டன்) அதிகம்.மதிப்பீட்டு காலத்தில், ரப்பர் இறக்கு மதி, 8,163 டன்னிலிருந்து, 26 ஆயிரத்து 375 டன்னாக அதிகரித்துள்ளது. அதேசமயம், இதன் ஏற்றுமதி, 6,664 டன்னிலிருந்து 936 டன்னாக குறைந்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால், மோட்டார் வாகனங்கள் விற்பனை சரிவடைந்துள்ளது. இதை யடுத்து, ரப்பருக்கான தேவையும் குறைந்துள்ளது. தற்போது, இயல்பு நிலை திரும்பியுள்ளதால், வரும் மாதங்களில் ரப்பருக்கு தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், தற்காலிக புள்ளி விவரத்தின்படி, ரப்பர் இறக்குமதி, 1 லட்சத்து 62 ஆயிரத்து 927 டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண் டின் இதே காலத்தில், 1 லட்சத்து 74 ஆயிரத்து 626 டன்னாக அதிகரித்து காணப்பட்டது. கணக்கீட்டு காலத்தில், நாட்டின் ரப்பர் ஏற்றுமதியும் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது, ரப்பர் ஏற்றுமதி 13 ஆயிரத்து 957 டன் என்ற அளவிலிருந்து, 23 ஆயிரத்து 408 டன்னாக உயர்ந்துள்ளது. ரப்பர் கையிருப்பு, கடந்த 2011ம் ஆண்டின் ஜனவரியில், 3 லட்சத்து 34 ஆயிரத்து 664 டன்னாக இருந்தது. இது, நடப்பு ஆண்டு ஜனவரியில், 2 லட்சத்து 67 ஆயிரம் டன்னாகக் குறைந்துள்ளதாக, ரப்பர் வாரியத்தின் தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)