பதிவு செய்த நாள்
15 பிப்2012
09:38
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.19 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 204.93 புள்ளிகள் அதிகரித்து 18.53.50 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 58.35 புள்ளிகள் அதிகரித்து 5476.30 புள்ளிகளோடு காணப் பட்டது. :நாட்டின் பங்கு வர்த்தகம் செவ்வாய்கிழமையன்றும் நன்கு இருந்தது. இத்தாலி, ஸ்பெயின்,போர்ச்சுகல் உள்ளிட்ட ஆறு ஐரோப்பிய நாடுகளின் கடன் பத்திரங்களின் தகுதி மதிப்பீட்டை, மூடிஸ் நிறுவனம் குறைத்தது. இதனால், சர்வதேச அளவில் பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது. இந்நிலையில், சில்லரை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்ததையடுத்து, இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. மேலும், சென்ற ஜனவரி மாதத்தில், நாட்டின் பொதுப் பணவீக்கம் குறைந்துள்ளது என்ற செய்தியும் பங்கு வர்த்தகத்திற்கு வலுச் சேர்த்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|