பாஸ்போர்ட் சேவை: மேலும் 3 பிரிவினருக்கு விதிமுறையில் தளர்வுபாஸ்போர்ட் சேவை: மேலும் 3 பிரிவினருக்கு விதிமுறையில் தளர்வு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கூட்டுறவு வங்கிகளில் ரூ.23 ஆயிரம் கோடி வைப்பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2012
10:35

சென்னை:கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களின் மொத்த வைப்பீடு, 23 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து, சாதனை படைத்துள்ளது.இந்த நிதியாண்டு முடிய, இன்னும், 45 நாட்கள் உள்ள நிலையில், கூட்டுறவுத் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட, 15 அறிவிப்புகள் மீதான முன்னேற்றம் குறித்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில், நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதில், அதிகாரிகள் கூறியதாவது:* நடப்பு ஆண்டு, விவசாயிகளுக்கு குறுகிய கால பயிர்க் கடனாக, 3,000 கோடி ரூபாய் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், இதுவரை, 2,821.61 கோடி ரூபாய், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உறுப்பினர்களுக்கு, கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட, 600 கோடி ரூபாயில், 373.11 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
* முதலீட்டுக் கடன், 300 கோடி ரூபாயில், 151.60 கோடியும்; விவசாயிகளின் விளைபொருட்கள் மீதான, தானிய ஈட்டுக் கடன், 85 கோடியில், 40.75 கோடியும், விவசாயிகளுக்கு சிறுபாசனக் கடனாக, 50 கோடி ரூபாயில், 26.10 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளன.
* மாற்றுத் திறனாளிகள் வாழ்க்கைத் திறனை உயர்த்த, 15 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 9.99 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
* சிறு வணிகக் கடனான, 80 கோடி ரூபாயில், 46.57 கோடியும்,125 நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலமாக, அனைத்து வகை கடன்களாக, 5,920 கோடி ரூபாயில், 4,377.38 கோடியும், தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கிகள் மூலம், நகைக் கடனாக, 1,000 கோடி ரூபாயில், 676.69 கோடி ரூபாயும், கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
* அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களின் வைப்பீடுகளை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளால், தற்போது, மொத்த வைப்பீடு, 23 ஆயிரத்து 81 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்து, சாதனை படைத்துள்ளது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.இதையடுத்து, மார்ச் மாத இறுதிக்குள், பல்வேறு வகையான கடன்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய வேண்டுமென, அமைச்சர் ராஜு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)