பதிவு செய்த நாள்
15 பிப்2012
12:06
எதிர்பாராத அதிக விளைச்சலால், தமிழகத்தில் பூண்டு விலை, கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு வருகிறது. மொத்த விலையில், கிலோவுக்கு 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. தற்போது மத்திய பிரதேசத்தில், பூண்டு விளைச்சல் அதிகமாகியுள்ளது. இந்தூர், ஜாவரா, மஞ்சூர், நீமச், பிப்லியா உள்ளிட்ட பகுதிகளில் விளைச்சல் அமோகம். அதனால், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரத்து, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 130 டன்னுக்கு குறையாமல் வரத்துள்ளதால், விலை கடுமையாக சரிந்துள்ளது. தற்போது மொத்த விலையில் கிலோ ஒன்று 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மலைப் பூண்டு மட்டும் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சில்லரை விலையில் கிலோவுக்கு கூடுதலாக 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை வைத்து விற்கின்றனர்.கோயம்பேடு பூண்டு மொத்த வியாபாரி முரளி கூறுகையில், ""பூண்டு விலை குறைந்துள்ளதால், சில்லரை வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். தொடர்ந்து, அடுத்தடுத்த மாதங்களில் மற்ற மாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்கும் என்பதால், இந்த ஆண்டு முழுவதும் பூண்டு விலை குறைவாகவே இருக்கும்,'' என்றார்.- எஸ்.விவேக் -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|