பதிவு செய்த நாள்
16 பிப்2012
02:52
கம்பம்:நடப்பு ஆண்டில், ஏலக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது என்றாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இதன் விலை பாதிக்கு பாதி குறைந்துள்ளது. இது, விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா இடுக்கி மாவட்டத்தில், 1.50 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி செலவுகள், தொழிலாளர் கூலி, விலை குறைவு போன்றவற்றால் ஏலக்காய் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். நடப்பு பருவத்தில், இதுவரை 12 ஆயிரம் டன் ஏலக்காய் வந்துள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில், 7 ஆயிரத்து 500 டன் மட்டுமே வரத்திருந்தது. இந்தாண்டு 4 ஆயிரத்து 500 டன் அளவிற்கு ஏலக்காய் சாகுபடி அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு, இதே நாளில், ஒரு கிலோ ஏலக்காய் விலை 1,085 ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. ஆனால், தற்போது இதன் விலை 600 ரூபாயாக சரிவடைந்துள்ளது. விளைச்சல் அதிகரித்துள்ள போதிலும், விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|