பதிவு செய்த நாள்
16 பிப்2012
02:54
ஈரோடு:"மின்தடை, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், நடப்பாண்டில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஆயத்த ஆடை உற்பத்தி, 30 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது,' என, ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத் தின் செயலர் சிவானந்தம் தெரிவித்தார்.
இந்தியாவில், 70 சதவீதம் பேர் விவசாயத்திலும், 30 சதவீதம் பேர் தொழில் துறையிலும் பணிபுரிகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும், 150 ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து உள்நாட்டு விற்பனைக்கு ஆயத்த ஆடைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. உலக நாடுகளுக்கும் இவை ஏற்றுமதி செய்யப் படுகின்றன. இத்துறையில், ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடக்கிறது.
சென்ற, 2004ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும், 15 சதவீத ஆயத்த ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்றாண்டு, எப்போதும் இல்லாத அளவிற்கு, 30 சதவீதம் வரை ஆயத்த ஆடை உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது.
இதில், எப்போதும் இல்லாத அளவில் மின் தடை, ஆள் பற்றாக்குறை, சாயக்கழிவு பிரச்னை, நூல் விலையில் ஏற்ற, இறக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் ஆயத்த ஆடை உற்பத்தி நலிவடைந்து வருகிறது. பல நிறுவனங்கள் தொழிலை தொடர முடியாமல் மூடப்பட்டு வருகின்றன.
சீனா, வங்கதேசத்தில் இருந்து எவ்வித வரியும் இல்லாமல், இறக்குமதியாகும் 61 பொருட்களில், 46 ஜவுளி பொருட் கள் அடங்கியுள்ளன. இதனால், உள்நாட்டில் 20 சதவீதம் வரை விலையில் வித்தியாசம் காணப்படுகிறது.ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலர் சிவானந்தம் கூறியதாவது:
மத்திய அரசு, 1990-1995ம் ஆண்டு வரை, 30 சதவீதம் ஊக்குவிப்பு தொகை, வருமான வரி சலுகை உள்ளிட்ட வை களை ஆயத்த ஆடைகளுக்கு வழங்கியது. இது, 2000ல், 15 சதவீதமாக குறைக்கப்பட்டது. தற்போது, ஆறு சதவீதமாக உள்ளது. இதனால், ஏற்றுமதியில் வெளிநாடுகளுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்கள் நூலிழைக்கு, 5 சதவீதம் மதிப்பு கூட்டு வரி, 10 சதவீதம் கலால் வரி செலுத்தி விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதர தொழில்களின் வாயிலாக அன்னிய செலாவணி அதிகம் கிடைப்பதால், மத்திய அரசு ஜவுளி தொழிலை கைவிட்டுள்ளது.
ஜவுளி துறைக்கென தனி அமைச்சர் நியமிக்கப்படவில்லை. மாநில அரசும், இத்துறையை கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் மட்டும் மின் தடையால், 15 சதவீதம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்க்க கூடங்குளம் அணுமின் நிலையம் உரிய பாதுகாப்புடன் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். எனவே, ஜவுளி தொழில் துறை எழுச்சி பெற, மத்திய மற்றும் மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு சிவானந்தம் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|