கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில்கம்ப்யூட்டர் விற்பனை 6.5 சதவீதம் சரிவுகடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில்கம்ப்யூட்டர் விற்பனை 6.5 சதவீதம் சரிவு ... நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில்நெல் கொள்முதல்13 சதவீதம் உயர்வு நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில்நெல் கொள்முதல்13 சதவீதம் உயர்வு ...
வர்த்தகம் » ஜவுளி
மின்தடையால் ஆயத்த ஆடைகள் உற்பத்தி குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2012
02:54

ஈரோடு:"மின்தடை, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், நடப்பாண்டில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஆயத்த ஆடை உற்பத்தி, 30 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது,' என, ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத் தின் செயலர் சிவானந்தம் தெரிவித்தார்.
இந்தியாவில், 70 சதவீதம் பேர் விவசாயத்திலும், 30 சதவீதம் பேர் தொழில் துறையிலும் பணிபுரிகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும், 150 ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து உள்நாட்டு விற்பனைக்கு ஆயத்த ஆடைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. உலக நாடுகளுக்கும் இவை ஏற்றுமதி செய்யப் படுகின்றன. இத்துறையில், ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடக்கிறது.
சென்ற, 2004ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும், 15 சதவீத ஆயத்த ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்றாண்டு, எப்போதும் இல்லாத அளவிற்கு, 30 சதவீதம் வரை ஆயத்த ஆடை உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது.
இதில், எப்போதும் இல்லாத அளவில் மின் தடை, ஆள் பற்றாக்குறை, சாயக்கழிவு பிரச்னை, நூல் விலையில் ஏற்ற, இறக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் ஆயத்த ஆடை உற்பத்தி நலிவடைந்து வருகிறது. பல நிறுவனங்கள் தொழிலை தொடர முடியாமல் மூடப்பட்டு வருகின்றன.
சீனா, வங்கதேசத்தில் இருந்து எவ்வித வரியும் இல்லாமல், இறக்குமதியாகும் 61 பொருட்களில், 46 ஜவுளி பொருட் கள் அடங்கியுள்ளன. இதனால், உள்நாட்டில் 20 சதவீதம் வரை விலையில் வித்தியாசம் காணப்படுகிறது.ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலர் சிவானந்தம் கூறியதாவது:
மத்திய அரசு, 1990-1995ம் ஆண்டு வரை, 30 சதவீதம் ஊக்குவிப்பு தொகை, வருமான வரி சலுகை உள்ளிட்ட வை களை ஆயத்த ஆடைகளுக்கு வழங்கியது. இது, 2000ல், 15 சதவீதமாக குறைக்கப்பட்டது. தற்போது, ஆறு சதவீதமாக உள்ளது. இதனால், ஏற்றுமதியில் வெளிநாடுகளுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்கள் நூலிழைக்கு, 5 சதவீதம் மதிப்பு கூட்டு வரி, 10 சதவீதம் கலால் வரி செலுத்தி விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதர தொழில்களின் வாயிலாக அன்னிய செலாவணி அதிகம் கிடைப்பதால், மத்திய அரசு ஜவுளி தொழிலை கைவிட்டுள்ளது.
ஜவுளி துறைக்கென தனி அமைச்சர் நியமிக்கப்படவில்லை. மாநில அரசும், இத்துறையை கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் மட்டும் மின் தடையால், 15 சதவீதம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்க்க கூடங்குளம் அணுமின் நிலையம் உரிய பாதுகாப்புடன் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். எனவே, ஜவுளி தொழில் துறை எழுச்சி பெற, மத்திய மற்றும் மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு சிவானந்தம் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)