நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில்நெல் கொள்முதல்13 சதவீதம் உயர்வுநடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில்நெல் கொள்முதல்13 சதவீதம் உயர்வு ... தங்கம் விலை உயர்வு  தங்கம் விலை உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கிராமங்களில் "மிகநுண்ணிய வங்கிக் கிளை' முதன்முறையாக மதுரையில் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2012
10:28

மதுரை : கனரா வங்கி சார்பில், தமிழகத்தில் முதன்முறையாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊர்சேரி கிராமத்தில், "மிகநுண்ணிய வங்கிக் கிளை' துவக்கப்பட்டது. வங்கி துணைப் பொதுமேலாளர் லட்சுமிபதி குமார் கூறியதாவது: அனைவருக்கும் வங்கி சேவை திட்டம், இந்தியாவில் முதன்முறையாக, தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் 2004ல் துவங்கப்பட்டது. இந்தியாவில், 2000க்கு மேல், மக்கள் தொகையுள்ள 70ஆயிரம் கிராமங்களில் "வங்கி சேவை" செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது 1000 முதல் 2000 மக்கள் தொகையுள்ள, இரண்டு லட்சத்து 60 ஆயிரம் கிராமங்களில், வங்கிகள் மிக நுண்ணிய கிளையை துவக்க திட்டமிட்டுள்ளன. பெங்களூருவை அடுத்து, தமிழகத்தில் அலங்காநல்லூர் கிராமத்தில் இக்கிளையை துவக்கியுள்ளோம். வைப்புத் தொகை இல்லாமல், கிராம மக்கள் வங்கிக் கணக்கு துவங்கலாம். பெயர், முகவரியுடன் கூடிய "பயோ மெட்ரிக் கார்டு' வழங்கப்படும். விரல் ரேகை வைத்ததும், தமிழில் தேவையான தகவல்களை பெறலாம். நூறு ரூபாய் முதல், சேமிப்புக் கணக்கில் செலுத்தலாம். ஒருநாளைக்கு அதிகபட்சமாக ரூ.2000 வரை எடுக்கலாம், செலுத்தலாம். முதற்கட்டமாக 10பேருக்கு தலா ரூ.25ஆயிரம் வீதம் தொழிற்கடன் வழங்கியுள்ளோம். இத்திட்டம் விரைவில், மற்ற கிராமங்களுக்கும் செயல்படுத்தப்படும், என்றார். உதவிப் பொது மேலாளர் பாலவிநாயகம், முதுநிலை மேலாளர் பாண்டியன், முன்னோடி வங்கி அலுவலர் சுப்ரமணியன், கிளை மேலாளர் டெல்வர் பங்கேற்றனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)