பதிவு செய்த நாள்
16 பிப்2012
14:24
புதுடில்லி: இந்தியாவில் 2011ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் (அக்டோபர் - டிசம்பர்) கம்யூட்டர்கள் விற்பனை முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 6.5 சதவீதம் சரிவடைந்து 25 லட்சமாக குறைந்துள்ளது என கார்ட்னர் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது.இதில், டெஸ்க் டாப் கம்யூட்டர்கள் விற்பனை மட்டும் 18 சதவீதம் சரிவடைந்துள்ளது என கார்ட்னர் நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் விஷால் திரிபாதி தெரிவித்துள்ளார். தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஹார்டு டிஸ்க்குகள் போதுமான அளவில் கிடைக்காததே இதற்கு முக்கிய காரணம் என அவர் மேலும் கூறியுள்ளார். அதேசமயம், போர்ட்டபிள் கம்யூட்டர்கள் விற்பனை 12 சதவீதம் உயர்ந்துள்ளது. இல்லையென்றால், ஒட்டுமொத்தத்தில் கம்யூட்டர்கள் விற்பனையில் அதிக சரிவு ஏற்பட்டு இருக்கும்.
நான்காவது காலாண்டில் டெல் நிறுவனத்தின் கம்யூட்டர்கள் விற்பனை 11 சதவீதம் அதிகரித்து மொத்த கம்யூட்டர்கள் விற்பனையில் 15.5 சதவீத பங்களிப்பை பெற்று இந்நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக 13.1 சதவீத பங்கை பெற்று லினோவா நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் விற்பனை வியக்கத்தக்க வகையில் 28 சதவீதம் உயர்ந்துள்ளது.கடந்த 2010 டிசம்பர் காலாண்டில் 15.8 சதவீத பங்களிப்பை பெற்றிருந்த எச்.பி. நிறுவனத்தின் பங்கு 2011 டிசம்பர் காலாண்டில் 12.4 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், இந்நிறுவனம் கம்ப்ïட்டர்கள் விற்பனையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நான்காவது இடத்தில் உள்ள ஏசர் நிறுவனத்தின் பங்களிப்பு 12.1 சதவீதமாக உள்ளது. நான்காவது காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை உயர்ந்துள்ளது.இந்தியாவில் கம்யூட்டர்கள் விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் டெல், லினோவா, எச்.பி. மற்றும் ஏசர் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 53.1 சதவீதமாக உள்ளது. நம் நாட்டைச் சேர்ந்த எச்.சி.எல். நிறுவனத்தின் பங்களிப்பு 5.5 சதவீதமாக மட்டுமே உள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|