பதிவு செய்த நாள்
17 பிப்2012
00:05
சென்னை: சென்னையைச் சேர்ந்த ஒலிம்பிக் கார்ட்ஸ் நிறுவனம், திருமண அழைப்பிதழ் அட்டைகள், வாழ்த்து அட்டைகள், லெட்டர் பேடு, விசிட்டிங் கார்டு, காலண்டர்கள், நோட்டு புத்தகங்கள், அஞ்சல் உறைகள் போன்றவற்றின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, பொது மக்களுக்கு பங்குகளை வெளியிட்டு 27 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இப்பங்கு வெளியீடு, இம்மாத இறுதியில் இருக்கும் என தெரிகிறது.ஒலிம்பிக் கார்ட்ஸ் நிறுவனத்திற்கு, தமிழ்நாட்டில், சொந்தமாக, ஆறு சில்லறை விற்பனை மையங்கள் உள்ளன. கூடுதலாக, நான்கு சில்லறை விற்பனை மையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை தவிர, ஒப்பந்த அடிப்படையில், ஐந்து விற்பனை மையங்கள் உள்ளன. இதனையும் இந்நிறுவனம் அதிகரிக்க உள்ளது.50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம், மேற்கண்ட பொருட்களை உள்நாட்டில் மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. வெளிநாடுகளிலும், விற்பனை மையங்களை தொடங்க முடிவு செய்துள்ளது.ஒலிம்பிக் கார்ட்ஸ் நிறுவனத்திற்கு, சென்னையில் மூன்று தொழில் பிரிவுகள் உள்ளன. இவையனைத்துமாக, நாளொன்றுக்கு, 1.50 லட்சம் அழைப்பிதழ் அட்டைகள் தயாரிக்கும் திறன் கொண்டவை. மேலும் சென்னையில், புதிதாக, தயாரிப்பு தொழில் பிரிவு தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.கடந்த 2010-11ம் நிதியாண்டில், இந்நிறுவனம், 45.72 கோடி ரூபாய் வருவாயில், 2.18 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|