பதிவு செய்த நாள்
17 பிப்2012
12:24
சிவகங்கை:""தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் "டெபாசிட்' தொகை ரூ.23 ஆயிரத்து 81 கோடியாக உயர்ந்து,சாதனை படைத்துள்ளது,'' என கூட்டுறவு, உணவு பாதுகாப்பு துறை செயலர் நிர்மலா தெரிவித்துள்ளார். சென்னை நடந்த கூட்டுறவு இணை பதிவாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:உணவு உற்பத்தியை அதிகரிக்க, விவசாயிகளுக்கு பயிர் கடனாக நடப்பாண்டு, 3000 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயித்ததில், இது வரை 2,821 கோடி ரூபாய் தொடக்க விவசாய கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. முதலீட்டு கடனாக 151 கோடி, தானிய ஈட்டுக்கடனாக 40 கோடி, சிறுபாசன கடனாக 26 கோடி, மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை திறனை உயர்த்த 9 கோடி, சிறு வணிகத்திற்கு 46.57 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. நகர கூட்டுறவு வங்கிகள் 125 மூலம் அனைத்து வகை கடன்களாக 4,377 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தொடக்க விவசாய ஊரக வளர்ச்சி வங்கிகள் மூலம் நகை கடன் 679 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளன.டெபாசிட் அதிகரிப்பு: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர, தொடக்க விவசாய கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சுய உதவி குழுக்களுக்கு 170 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்தததில்,111.50 கோடி வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கி, சங்கங்களின் டெபாசிட் தொகையை உயர்த்த தீவிர முயற்சி எடுக்கப்பட்டன. இதன் விளைவாக 23 ஆயிரத்து 81 கோடி ரூபாயாக டெபாசிட் உயர்ந்துள்ளது, என்றார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|