நடப்பு நான்காவது காலாண்டில்... நாட்டின் தங்கம் இறக்குமதி220 டன்னாக குறையும் நடப்பு நான்காவது காலாண்டில்... நாட்டின் தங்கம் இறக்குமதி220 டன்னாக குறையும் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கூட்டுறவு வங்கிகளில் "டெபாசிட்' ரூ.23,081 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2012
12:24

சிவகங்கை:""தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் "டெபாசிட்' தொகை ரூ.23 ஆயிரத்து 81 கோடியாக உயர்ந்து,சாதனை படைத்துள்ளது,'' என கூட்டுறவு, உணவு பாதுகாப்பு துறை செயலர் நிர்மலா தெரிவித்துள்ளார். சென்னை நடந்த கூட்டுறவு இணை பதிவாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:உணவு உற்பத்தியை அதிகரிக்க, விவசாயிகளுக்கு பயிர் கடனாக நடப்பாண்டு, 3000 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயித்ததில், இது வரை 2,821 கோடி ரூபாய் தொடக்க விவசாய கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. முதலீட்டு கடனாக 151 கோடி, தானிய ஈட்டுக்கடனாக 40 கோடி, சிறுபாசன கடனாக 26 கோடி, மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை திறனை உயர்த்த 9 கோடி, சிறு வணிகத்திற்கு 46.57 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. நகர கூட்டுறவு வங்கிகள் 125 மூலம் அனைத்து வகை கடன்களாக 4,377 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தொடக்க விவசாய ஊரக வளர்ச்சி வங்கிகள் மூலம் நகை கடன் 679 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளன.டெபாசிட் அதிகரிப்பு: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர, தொடக்க விவசாய கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சுய உதவி குழுக்களுக்கு 170 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்தததில்,111.50 கோடி வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கி, சங்கங்களின் டெபாசிட் தொகையை உயர்த்த தீவிர முயற்சி எடுக்கப்பட்டன. இதன் விளைவாக 23 ஆயிரத்து 81 கோடி ரூபாயாக டெபாசிட் உயர்ந்துள்ளது, என்றார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)