டிசம்பர் மாதத்தில் சேவைகள் ஏற்றுமதி 1,118 கோடி டாலர்டிசம்பர் மாதத்தில் சேவைகள் ஏற்றுமதி 1,118 கோடி டாலர் ... சேவைகள் துறை ஏற்றுமதி ரூ.55,900 கோடியாக குறைவு சேவைகள் துறை ஏற்றுமதி ரூ.55,900 கோடியாக குறைவு ...
பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வால்...ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் குறையும் - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2012
01:44

நடப்பு 2011-12ம் நிதியாண்டில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின், புதிய பிரிமிய வருவாய், கடந்த நிதியாண்டை விட, 15-20 சதவீதம் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2010-11ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய், 15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து 26 ஆயிரத்து 381 கோடி ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது.
இதில், பொதுத் துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி.நிறுவனத்தின் புதிய பிரிமிய வருவாய், 87 ஆயிரத்து 12 கோடி ரூபாயாக (21.65 சதவீதம் வளர்ச்சி) இருந்தது. தனியார் துறையைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 39 ஆயிரத்து 369 கோடி ரூபாயாக (2.59 சதவீதம் வளர்ச்சி) இருந்தது. நாடு முழுவதும், எல்.ஐ.சி., உட்பட 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
பணவீக்கம், வட்டி உயர்வு, பங்கு வர்த்தகத்தில் ஏற்ற, இறக்கம் போன்ற காரணங்களால், இந்நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய் வளர்ச்சி, 15-20 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பு 2011-12ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய், 17 சதவீத எதிர்மறை வளர்ச்சி கண்டு, 71 ஆயிரத்து 953 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதில், எல்.ஐ.சி. நிறுவனத்தின் புதிய பிரிமிய வருவாய், 15.66 சதவீதம் எதிர்மறை வளர்ச்சி கண்டு, 52 ஆயிரத்து 53 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே காலத்தில், தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாயும், 20.34 சதவீத எதிர்மறை வளர்ச்சி கண்டு, 19,900 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இதுகுறித்து இத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:நடப்பு நிதியாண்டு முடிய, இன்னும் ஒரு மாதமே உள்ளது. இதே நிலை நீடித்தால், இந்நிறுவனங்களின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 20-25 சதவீதம் வரை குறையக்கூடும். இதில், ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஓய்வூதியத் திட்டங்களை குறைந்த அளவிலேயே அறிமுகம் செய்துள்ளன.
இதனால், வரிச் சலுகை பெற விரும்புவோர், மற்ற திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். மேலும், வரும் 2012-13ம் நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்திற்கு பின் தான் இத்துறை இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)