சேவைகள் துறை ஏற்றுமதி ரூ.55,900 கோடியாக குறைவுசேவைகள் துறை ஏற்றுமதி ரூ.55,900 கோடியாக குறைவு ... கோதுமை உற்பத்தியில் புதிய சாதனை கோதுமை உற்பத்தியில் புதிய சாதனை ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சர்க்கரை உற்பத்தி 2.60 கோடி டன்னாக அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2012
01:49

புதுடில்லி:நடப்பு பருவத்தில், கரும்பு பயிரிடப்படும் பரப்பளவு அதிகரித்ததை அடுத்து, நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.60 கோடி டன்னாக அதிகரிக்கும் என, இந்திய சர்க்கரை உற்பத்தியாளர் கூட்டமைப்பு (இஸ்மா) மதிப்பிட்டுள்ளது. நடப்பு சர்க்கரை பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), நாடு முழுவதும், 524 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆலைகளின் சர்க்கரை உற்பத்தி, அக்டோபர் முதல் பிப்ரவரி 15ம் தேதி வரையிலான காலத்தில், 1.61 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய பருவத்தின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 15 சதவீதம் (1.40 கோடி டன்) அதிகமாகும்.மதிப்பீட்டு காலத்தில், மேற்கொள்ளப்பட்ட மொத்த சர்க்கரை உற்பத்தியில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது.
இம்மாநிலத்தின் கரும்பு பிழிதிறன், 11.20 சதவீதம் வளர்ச்சி கண்டதையடுத்து, சர்க்கரை உற்பத்தி 14 சதவீதம் உயர்ந்து, 56.60 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.இதைத் தொடர்ந்து, உத்தர பிரதேசத்தின் சர்க்கரை உற்பத்தி 13 சதவீதம் உயர்ந்து, 45.10 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இம்மாநிலத்தின் பிழிதிறன் 8.96 சதவீதத்திலிருந்து 8.75 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், தமிழகம் (7.10 லட்சம் டன்), கர்நாடகம் (25.3 லட்சம் டன்), ஆந்திரா (7.30 லட்சம் டன்) ஆகிய தென் மாநிலங்களிலும் சர்க்கரை உற்பத்தி, சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது.நடப்பு 2011-12ம் ஆண்டில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.60 கோடி டன்னாகவும், உள்நாட்டில், இவற்றிற்கான தேவை, 2.20 கோடி டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.42 கோடி டன்னாக இருந்தது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)