பதிவு செய்த நாள்
19 பிப்2012
01:58

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, பிப்ரவரி 10ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 37 கோடி டாலர் (1,850 கோடி ரூபாய்) சரிவடைந்து, 29 ஆயிரத்து 338 கோடி டாலராக (14 லட்சத்து 66 ஆயிரத்து 900 கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இது, பிப்ரவரி 3ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 17.70 கோடி டாலர் (885 கோடி ரூபாய்) குறைந்து, 29 ஆயிரத்து 375 கோடி டாலராக (14 லட்சத்து 68 ஆயிரத்து 750 கோடி ரூபாய்) இருந்தது.
இதே வாரத்தில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 37 கோடி டாலர் குறைந்து, 25 ஆயிரத்து 944 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 80 லட்சம் டாலர் உயர்ந்து, 273 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, எவ்வித மாற்றமும் இன்றி, 2,673 கோடி டாலர் என்றளவிலேயே உள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான, யூரோ உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளி மதிப்பு மாறுபட்டதையடுத்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணி மதிப்பு குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|