பருப்பு வகை உற்பத்தி குறையும்பருப்பு வகை உற்பத்தி குறையும் ... செங்கல் சூளைகளால் விவசாய நிலங்கள் பாதிப்பு செங்கல் சூளைகளால் விவசாய நிலங்கள் பாதிப்பு ...
ஸ்ட்ராபெரி பழங்களுக்கு தேவை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2012
02:01

புனே:உள்நாட்டு சந்தைகளில் ஸ்ட்ராபெரி பழங்களுக்கான தேவை, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. ஸ்ட்ராபெரி அதிகம் விளையும் மகாராஷ்டிராவின் பஞ்சாகனி மற்றும் மகாபலேஸ்வர் பகுதிகளிலிருந்து, இதன் வரத்து 16,000 - 18,000 டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு, 14,000 - 15,000 டன் என்ற அளவில் குறைந்திருந்தது.நாட்டின் ஸ்ட்ராபெரி பழங்கள் உற்பத்தியில், பஞ்சாகனி மற்றும் மகாபலேஸ்வர் பகுதிகளின் பங்களிப்பு 85 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சிய பங்களிப்பை, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் வழங்குகின்றன.
நாட்டின் ஸ்ட்ராபெரி பழங்களின் மொத்த விற்பனையில், சுற்றுலா பயணிகளின் பங்களிப்பு 50 சதவீதமாக உள்ளது. மும்பை மற்றும் புனே மாநிலங்கள் இதற்கு முக்கிய சந்தைகளாக விளங்குகின்றன. இவை தவிர, தற்போது, சென்னை, பெங்களூரு மற்றும் கோவா ஆகிய பகுதிகளிலும் இதற்கான தேவை அதிகரித்து வருகிறது என ஸ்ட்ராபெரி பயிரிடுவோர் கூட்டமைப்பின் தலைவர் பாபாசாகேப் பில்லாரே தெரிவித்தார்.ஸ்ட்ராபெரி பழங்கள் விரைவில் அழுகும்தன்மை கொண்டவை. இதனால், வெகு தொலைவில் உள்ள சந்தைகளுக்கு இதைக் கொண்டு செல்வது கடினம்.
தற்போது, பெங்களூருக்கு 20 டன் என்ற அளவிலும், சென்னை மற்றும் கோவா பகுதிகளுக்கு முறையே 15 டன் மற்றும் 10 டன் என்ற அளவிலும் ஸ்ட்ராபெரி பழங்கள் அனுப்பப்படுகின்றன. ஸ்ட்ராபெரி பருவம், நவம்பர் துவங்கி மார்ச் வரை கடைபிடிக்கப்படுகிறது. மேலும், இந்தியாவில், ஸ்ட்ராபெரி பயிரிடும் பரப்பளவு 1,700 முதல் 1,800 ஏக்கராக உள்ளது. 1,500க்கும் அதிகமான விவசாயிகள் இத்தொழில் ஈடுபட்டுள்ளனர்.
உற்பத்திச் செலவு அதிகரிப்பு, கூலி உயர்வு போன்றவற்றால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வரும் 2013ம் ஆண்டில், ஸ்ட்ராபெரி பயிரிடும் பரப்பளவு கூடுதலாக 100 ஏக்கர் அளவிற்கே அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு பாபாசாகேப் பில்லாரே @மலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)