செங்கல் சூளைகளால் விவசாய நிலங்கள் பாதிப்புசெங்கல் சூளைகளால் விவசாய நிலங்கள் பாதிப்பு ... இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க கெனான் நிறுவனம் தயக்கம்! இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க கெனான் நிறுவனம் தயக்கம்! ...
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில்.விமான பயணம் செய்தோர் எண்ணிக்கை 53 லட்சம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2012
02:07

புதுடில்லி:சென்ற ஜனவரியில், உள்நாட்டிற்குள் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 53 லட்சத்து 33 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை, 49 லட்சத்து 36 ஆயிரமாக இருந்தது. ஆக, கடந்தாண்டு ஜனவரி விட, நடப்பாண்டு ஜனவரியில், விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 8.04 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி:இருப்பினும், நடப்பாண்டு ஜனவரியில், விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை வளர்ச்சி, ஒற்றை இலக்க அளவிற்கு தான் உயர்ந்துள்ளது. இது, 2008ல், சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி நிலைக்கு பிறகு ஏற்பட்டுள்ள சரிவு நிலையாகும்.கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமானங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டதையடுத்து, விமான சேவை துறையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில், விமான பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.இருப்பினும், கடந்தாண்டு ஜனவரியில், விமான பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை வளர்ச்சி, இரட்டை இலக்க அளவிற்கு இருந்தது. கிங்பிஷர் மற்றும் கோஏர் தவிர்த்த, அனைத்து விமான சேவை நிறுவனங்களும், அதிகளவில் பயணிகளை கையாண்டுள்ளன.
சந்தை பங்களிப்பு:குறிப்பாக, ஜெட் மற்றும் ஜெட் லைட் விமான சேவை நிறுவனங்கள், அதிகளவில் பயணிகளை கையாண்டுள்ளன. இதையடுத்து, ஒட்டுமொத்த அளவில் இந்நிறுவனங்கள், பயணிகளை ஏற்றிச் சென்றதில், 25 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளன. மேலும், இவ்விரு நிறுவனங்களும், உள்நாட்டு விமானச் சேவை துறையில், 28.8 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டு முதலிடத்தை பெற்றுள்ளன.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், விமானங்களில் பயணித்தோர் எண்ணிக்கை, கடந்த டிசம்பரை விட அதிகரித்துள்ளது. இருப்பினும், டிசம்பர் மற்றும் ஜனவரியில், இத்துறை ஒற்றை இலக்க அளவிற்கே வளர்ச்சியை பெற்றுள்ளது.
விமானங்களில், பயணிப்போர் எண்ணிக்கை மற்றும் தேவை அதிகரித்துள்ள அதே நிலையில், பல விமான சேவை நிறுவனங்கள், கூடுதல் இருக்கை வசதிகளுடன் சேவையில் ஈடுபட்டன.இண்டிகோ நிறுவனம், சென்ற ஜனவரியில், 86 சதவீத அளவிற்கு பயணிகளை கையாண்டுள்ளது. அதேசமயம், கடந்த டிசம்பரில், இந்நிறுவனம் 90.4 சதவீத அளவிற்கு பயணிகளை கையாண்டிருந்தது. இதே மாதங்களில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின், விமானங்களில் பயணித்தோர் எண்ணிக்கை, 78.3 சதவீதத்திலிருந்து, 70.2 சதவீதமாக குறைந்திருந்தது. இதே மாதங்களில், இதர விமானச் சேவை நிறுவனங்கள் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை, 71.2 - 82.5 சதவீதம் என்றளவில் இருந்தது.
பனிப்பொழிவு:நாட்டின் வட மாநிலங்களில், கடும் பனிப்பொழிவு இருந்ததால், சென்ற ஜனவரியில், ஒட்டுமொத்த அளவில், பல நிறுவனங்கள் விமானச் சேவையை ரத்து செய்துள்ளன. இந்த எண்ணிக்கை, 2 சதவீதம் என்றளவில் இருந்தது. இவ்வகையில், ஏர் இந்தியா நிறுவனம், 4.7 சதவீத அளவிற்கு விமான சேவையை ரத்து செய்து, முதலிடத்தில் உள்ளது.
இதைத் தொடர்ந்து, இண்டிகோ நிறுவனம், 0.7 சதவீத அளவிற்கு விமான சேவையை ரத்து செய்திருந்தது. அதிக இடர்பாட்டிற்கு, உள்ளாகியுள்ள கிங்பிஷர் நிறுவனம், 90 சதவீத அளவிற்கு, சரியான நேரத்திற்கு விமானங்களை இயக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வகையில், ஏர் இந்தியா நிறுவனம், 63.8 சதவீத அளவிற்கு,சரியான நேரத்தில் விமானங்களை இயக்கியுள்ளது. விமானச் சேவை நிறுவனங்கள், புறப்பாட்டிற்கான நேர அறிவிப்பிலிருந்து, 15 நிமிடத்திற்குள் விமானங்களை இயக்குமேயானால், அது சரியான நேரத்தில் இயக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)