பதிவு செய்த நாள்
22 பிப்2012
10:37
ஜப்பானை சேர்ந்த ஹோண்டா கார் நிறுவனம், இந்தியாவில் சியல் நிறுவனத்துடன் இணைந்து, ' ஹோண்டா சியல் கார்ஸ் இந்தியா' என்ற பெயரில், நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் சிட்டி, அக்கார்டு, சிவிக், ஜாஸ், பிரியோ மற்றும் சிஆர்-வி ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு உ.பி., மாநிலம் நொய்டாவிலும், ராஜஸ்தான் மாநிலம் பிவாடியிலும் தொழிற்சாலை உள்ளது. கடந்த ஆண்டு தாய்லாந்தில் மிகப்பெரிய வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவில் உள்ள ஹோண்டா கார் தொழிற்சாலைகளுக்கு தேவையான உதிரி பாகங்கள், தாய்லாந்தில் இருந்து தான் வருகின்றன. ஆனால், அங்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, உதிரிபாகங்கள் சப்ளையை கடுமையாக பாதித்தன. இதனால், இந்தியாவிலும் ஹோண்டா கார் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.
குறிப்பாக, கடந்த ஆண்டு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரியோ கார், மேம்படுத்தப்பட்ட நிலையிலும், அதிரடி விலையாக விலை குறைக்கப்பட்ட நிலையிலும் வெளிவந்த ஜாஸ் காருக்கு, இந்தியாவில் நல்ல வரவேற்பு காணப்பட்டது. ஆனால், முன்பதிவுக்கு ஏற்ப இந்த கார்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. இதற்கு உதிரிபாகங்கள் தாய்லாந்தில் இருந்து வராததே காரணம். இந்த சூழ்நிலையில், ஜப்பான் மற்றும் சீனாவில் இருந்து மாற்று வழியில், உதிரிபாகங்கள் சப்ளைக்கு, ஹோண்டா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதனால், இந்தியாவில் உள்ள ஹோண்டா கார் தொழிற்சாலையில், கார் உற்பத்தி மீண்டும் விறுப்பாக துவங்கியுள்ளது. தற்போது ஒரு நாளைக்கு இரண்டு ஷிப்ட்களில், 370 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை ஒரு நாளைக்கு 440 கார்கள் என்ற அளவில் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பிரியோ மற்றும் ஜாஸ் கார்கள், உடனடி டெலிவரி கிடைக்கும் என்று நிறுவனம் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|