பதிவு செய்த நாள்
22 பிப்2012
10:45
ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம், இந்தியாவில் கடந்த 1999ம் ஆண்டு ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா( ஹெச்.எம்.எஸ்.ஐ.,) என்ற நிறுவனத்தை துவக்கியது. துவக்கத்தில், இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆக்டிவா ஸ்கூட்டருக்கு, இதுநாள் வரை நல்ல வரவேற்பு உள்ளது. இதே போல, யுனிகார்ன் பைக் விற்பனை மூலமும், இந்த நிறுவனம் சாதித்து வருகிறது. இந்த நிறுவனம், ஆக்டிவா, தியோ, டெர்னோ ஆகிய பெயர்களில் ஸ்கூட்டர்களையும், யுனிகார்ன், ஷைன், சிபி டிவிஸ்டர், சிபிஎஃப் ஸ்டன்டர், சிபி டேஷலர் ஆகிய பெயர்களில் மோட்டார் சைக்கிள்களையும், விற்பனை செய்து வருகிறது. இருசக்கர வாகன விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோவுக்கு பிறகு, மூன்றாவது இடத்தில் ஹெச்.எம்.எஸ்.ஐ., நிறுவனம் உள்ளது.
ஆனால், ஆக்டிவா மற்றும் யுனிகார்ன் இருசக்கர வாகனங்களுக்கு முன்பதிவு செய்தால், பல மாதங்களுக்கு பிறகே டெலிவரி செய்யப்படுகிறது.
இது தான், இந்த நிறுவனத்துக்கு மிகப்பெரிய சிக்கலாக இருந்தது. இந்த நிறுவனத்துக்கு ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள மானேஸர் என்ற இடத்தில் ஒரு தொழிற்சாலை உள்ளது. இங்கு ஆண்டுக்கு 28 லட்சம் இருசக்கர வாகனங்களைஉற்பத்தி செய்ய முடியும். இதே போல, ராஜஸ்தான் மாநிலம் தபுகாரா என்ற இடத்திலும் ஒரு தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள முதல் பிரிவில் 6 லட்சம் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். இங்கு ஆக்டிவா, சிபி டிவிஸ்டர், ஷைன் ஆகிய மாடல் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்துடன் தற்போது இங்கு இரண்டாவது பிரிவும் துவக்கப்பட்டுள்ளது. எனவே, ஆண்டுக்கு கூடுதலாக 6 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம், ஆக்டிவா ஸ்கூட்டருக்கான வெயிடிங் பிரியடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பெங்களூருவில் கட்டப்பட்டு வரும் தொழிற்சாலை 2013ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்கப்படுகிறது. பெங்களூரு தொழிற்சாலையில் உற்பத்தி துவங்கப்பட்ட பிறகு, இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு 40 லட்சம் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி என்ற நிலையை, இந்த நிறுவனம் உருவாக்கி விடும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|