பதிவு செய்த நாள்
22 பிப்2012
13:49
புதுடில்லி: நஷ்டத்தில் இருக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மீண்டும் இயங்க வைக்கும் வகையில் எஸ்பிஐ வங்கி ரூ.1200 கோடியை நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. கடும் நிதி நெருக்கடி காரணமாக கடந்த சில நாட்களாகவே கிங் பிஷர் விமான சேவை பாதிக்கப்பட்டிருந்தது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பல விமானங்கள் ரத்து செய்ததது. இதையடுத்து கிங் பிஷர் நிறுவனத்திற்கு விமான துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. கிங் பிஷர் விமான அதிகாரிகளும் விளக்கம் அளித்தனர்.மேலும் தங்களுக்கு நிதியுதவி அளிக்கும் படி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் கிங்பிஷரின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இந்நிலையில் நிதி உதவி அளிக்காவிட்டாலும், விமான எரிபொருளையாவது தாங்களாகவே நேரடியாக இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று விஜய் மல்லையா கூறியிருந்தார்.இந்நிலையில் கிங்பிஷரின் நஷ்டத்தை ஈடுசெய்ய எஸ்.பி.ஐ வங்கி ரூ.1200 கோடி நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. இதேப்போல பஞ்சாப் நேஷனல் வங்கியும் ரூ.160 முதல் 200 கோடி வரை நிதியுதவி அளிக்க உத்தரவாதம் அளித்துள்ளது. இதனால் கிங்பிஷர் உடனடியாக உயிர்பெறும் என்று நம்பப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|