பதிவு செய்த நாள்
22 பிப்2012
15:05
விருதுநகர்:வருமான வரி விதிப்பால், தள்ளாடும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் உள்ளன.தமிழகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 124 நகர கூட்டுறவு வங்கி , 22 மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. இந்த வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்குகின்றன. இந்த தொகைகொண்டு விவசாயிகளுக்கு பயிர் கடன், நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு காசுக்கடன் என, குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது.
மேலும், நகைக்கடன், சிறு தொழில் கடன்களும் வழங்கப்படுகின்றன.இந்த வங்கிகள், சேவை அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்கி வரும் நிலையில், ஆண்டு தோறும் ரூ. 80 லட்சம் முதல் ரூ.ஒரு கோடி வரை, வருமான வரியாக செலுத்தப்படுகிறது. தங்களது வருவாயில் பெரும் பகுதியை வருமான வரிக்காக, கூட்டுறவு வங்கிகள் கட்டுவதால், பல வங்கிகள் தள்ளாடும் நிலையில் உள்ளன. கூட்டுறவு வங்கிகளுக்கு வருமான வரி விலக்கு வழங்கினால், முதலீட்டு தொகையை அதிகரிக்க முடியும். தள்ளாடும் நிலையில் உள்ள வங்கிகளும் புத்துணர்வு பெறும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|