கனிமங்களின் உற்பத்தி மதிப்புரூ.17,286 கோடியாக உயர்வுகனிமங்களின் உற்பத்தி மதிப்புரூ.17,286 கோடியாக உயர்வு ... 28 விமானங்களை இயக்க கிங்பிஷர் நிறுவனம் சம்மதம் 28 விமானங்களை இயக்க கிங்பிஷர் நிறுவனம் சம்மதம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சாகுபடி பரப்பளவு அதிகரிப்பால்...ஆமணக்கு உற்பத்தி 16 லட்சம் டன்னாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2012
00:15

மும்பை: நடப்பு பருவத்தில் (அக்டோபர் - நவம்பர்), நாட்டின் ஆமணக்கு உற்பத்தி, 16 லட்சத்து 19 ஆயிரம் டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, கடந்த பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 36 சதவீதம் (12 லட்சத்து 50 ஆயிரம் டன்) அதிகமாக இருக்கும் என இந்திய தாவர எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக, நீல்சன் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு பருவத்தில், உள்நாட்டில் ஆமணக்கு சாகுபடி செய்யும் பரப்பளவு, 34 சதவீதம் அதிகரித்துள்ளதையடுத்து, இதன் சாகுபடி பரப்பளவு 8 லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டேரிலிருந்து, 11 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.குஜராத்
உள்நாட்டில், குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்களில், மிக அதிகளவில் ஆமணக்கு சாகுபடி செய்யப்படுகிறது. இருப்பினும், நாடு தழுவிய அளவில், ஆமணக்கு சாகுபடியில், குஜராத் மாநிலத்தில் சாகுபடி பரப்பளவு 50 சதவீதம் என்ற அளவிலும், உற்பத்தி 3ல் 1 பங்கு என்ற அளவிலும் உள்ளது.
இம்மாநிலத்தின், ஆமணக்கு உற்பத்தி, கடந்த பருவத்தை விட, 36 சதவீதம் அதிகரித்து, 9 லட்சம் டன்னிலிருந்து 12.26 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இம்மாநிலத்தில் ஒரு சில பகுதிகளில் உற்பத்தி குறைவால், இங்கு இதன் உற்பத்தி, 6 சதவீதம் குறையும் என தெரிகிறது. ஆனால், சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளதால், இந்த உற்பத்தி இழப்பு, பாதிப்பை ஏற்படுத்தாது.குஜராத்தின் மொத்த ஆமணக்கு சாகுபடியில், ஹட்ச், சுரேந்திர நகர், வதோதரா மற்றும் பதான் ஆகிய மாவட்டங்களின் பங்களிப்பு 50 சதவீத அளவிற்கு உள்ளது. அதேசமயம், காந்தி நகர், சபர்கந்தா ஆகிய மாவட்டங்களில், நடப்பு பருவத்தில் உற்பத்தி சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ராஜஸ்தான்ராஜஸ்தான் மாநிலத்தில், நடப்பு பருவத்தில், ஆமணக்கு உற்பத்தி 2 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிட்பட்டுள்ளது. கடந்த பருவத்தில், இங்கு ஆமணக்கு உற்பத்தி1.80 லட்சம் டன்னாக இருந்தது. இம்மாநிலத்தில், இதன் சாகுபடி பரப்பளவு, 1.27 லட்சம் ஹெக்டேரிலிருந்து 1.69 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
நமது அண்டை மாநிலமான ஆந்திராவில், நடப்பு பருவத்தில், ஆமணக்கு சாகுபடி பரப்பளவு, கடந்த பருவத்தை விட 16 சதவீதம் அதிகரித்து, 2.30 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
இருப்பினும், இம்மாநிலத்தில், ஒரு ஹெக்டேருக்கு, 677 கிலோ அளவிற்கே உற்பத்தி உள்ளது. இதனால், இம்மாநிலத்தின் ஆமணக்கு உற்பத்தி, 11 சதவீதம் உயர்ந்து 1.56 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் அனந்தப்பூர், கர்னூல், மக்பூப்நகர், பிரகாசம் மற்றும் ரெங்காரெட்டி ஆகிய மாவட்டங்களில், ஆமணக்கு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேற்கு மாநிலங்களுக்கும், கிழக்கு மாநிலங்களுக்கும் தட்பவெப்ப நிலையில் உள்ளதால், உற்பத்தியில் வித்தியாசம் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேற்கண்ட மூன்று மாநிலங்கள் தவிர, இதர மாநிலங்களில் ஆமணக்கு உற்பத்தி மற்றும் சாகுபடி பரப்பளவில் அதிக மாற்றமில்லை.இந்தியாவின் பங்களிப்பு
உலக அளவில், ஆமணக்கு உற்பத்தியில், இந்தியாவின் பங்களிப்பு, 65 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நாட்டில் விளையும் மொத்த ஆமணக்கில், 51 சதவீதம், எண்ணெய் எடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், நாட்டின் மொத்த ஆமணக்கு எண்ணெயில், 75 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தியாவிலிருந்து, அதிக அளவில் இந்த எண்ணெயை இறக்குமதி செய்து கொள்கின்றன.பயன்பாடுஆமணக்கு எண்ணெய், சோப்பு, வெளிப்பூச்சு, அழகு சாதனங்கள், மருந்து, வாசனைத் திரவியங்கள், உராய்வைத் தடுப்பதற்கான மசகுப் பொருட்கள் தயாரிப்பிற்கு முக்கிய மூலப் பொருளாக உள்ளது.நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாத காலத்தில், 3.24 லட்சம் டன் ஆமணக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 3,205 கோடி ரூபாய் மதிப்பிற்கு அன்னியச் செலாவணி கிடைத்துள்ளது. கடந்த முழு நிதியாண்டில், இதன் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 3.43 லட்சம் டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில், 2,362 கோடி ரூபாயாகவும் இருந்தது.


Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)