பதிவு செய்த நாள்
23 பிப்2012
10:57
புதுடில்லி: வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் வங்கி டெபாசிட்டுகளுக்கு செத்து வரி விதிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது வழக்கத்திலுள்ள வருமானவரி சட்டம் 50 ஆண்டுகள் பழமையானது. பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பொதுவான மாற்றங்களை கருத்தில் கொண்டு 1961ம் ஆண்டு வருமான வரி சட்டம் திருத்தங்களோடு நேரடி வரி மசோதா பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக கடந்த 2010 ஆகஸ்டு மாதம் முதல் நிலுவையில் உள்ளது. இதன்படி, வெளிநாட்டு வங்கிகளில் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டுகளுக்கு செல்வ வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வருமான வரி கணக்கு வைத்திருப்பவர்கள் வெளிநாடுகளில் உள்ள அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளும் முதலீடுகள் குறித்த தகவல்களை வருமான வரி துறைக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|