சைக்கிள் விலை 2 சதவீதம் உயர்கிறதுசைக்கிள் விலை 2 சதவீதம் உயர்கிறது ... நாட்டின் துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 46 கோடி டன் நாட்டின் துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 46 கோடி டன் ...
கயிறு பொருட்கள் ஏற்றுமதி ரூ.1,000 கோடியை எட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2012
01:53

புதுடில்லி:நாட்டின் கயிறு மற்றும் அது சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி, சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதை எடுத்துக்காட்டும் விதமாக, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், இதன் ஏற்றுமதி, 1,000 கோடி ரூபாயை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்ற 2011ம் ஆண்டு, ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், கயிறு மற்றும் அது தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 20 சதவீதம் அதிகரித்து, 2.66 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 2.21 லட்சம் டன்னாக இருந்தது என, இந்திய கயிறு வாரியம் தெரிவித்துள்ளது.
இதே காலத்தில், மதிப்பின் அடிப்படையிலான இதன் ஏற்றுமதி, 11 சதவீதம் அதிகரித்து, 569 கோடியிலிருந்து, 633 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.ரஷ்யா மற்றும் லத்தீன், அமெரிக்கா போன்ற புதிய சந்தையில், கயிறு பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதையடுத்து, இதன் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி காணும் என, வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில், கயிறு பொருட்களின் உற்பத்தி, 3.50 லட்சம் டன்னாக உள்ளது. இதில், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் பங்களிப்பு மட்டும், 90 சதவீதம் என்ற அளவில் உள்ளது.இந்தியாவிலிருந்து, கயிறு பொருட்கள், 97 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கயிறு பொருட்கள் ஏற்றுமதியில், அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர, ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின், கனடா, ஜப்பான், கிரீஸ், தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் உள்ளிட்ட நாடுகளுக்கு, அதிகளவில் கயிறு மற்றும் கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சென்ற 2010-11ம் நிதியாண்டில், முன் எப்போதும் இல்லாத அளவாக, 3.21 லட்சம் டன் கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு, 807 கோடி ரூபாயாகும். வரும் 12வது ஐந்தாண்டு (2012-17) திட்ட காலத்தில், 2,000 கோடி மதிப்பிலான கயிறு பொருட்களை ஏற்றுமதி செய்ய, இந்திய கயிறு வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
கேரளா, தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தேங்காய் அதிகம் விளைகிறது. இதனால், இம்மாநிலங்களில் குடிசை தொழில்களில் கயிறு பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இது, இம்மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் வலுச் சேர்க்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)