கயிறு பொருட்கள் ஏற்றுமதி ரூ.1,000 கோடியை எட்டும்கயிறு பொருட்கள் ஏற்றுமதி ரூ.1,000 கோடியை எட்டும் ... ஏப்., 13க்குள் கொழும்பு - மதுரை நேரடி விமானம்:மிகின்லங்கா ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி தகவல் ஏப்., 13க்குள் கொழும்பு - மதுரை நேரடி விமானம்:மிகின்லங்கா ஏர்லைன்ஸ் தலைமை ... ...
நாட்டின் துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 46 கோடி டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2012
01:56

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாத காலத்தில், நாட்டின் முக்கிய துறைமுகங்களில், 46.70 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் கையாளப்பட்ட சரக்குகளை விட, 0.24 சதவீதம் (46.82 கோடி டன்) குறைவு என, இந்திய துறைமுகங்கள் சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோல்கட்டாவில், இரண்டு துறைமுகங்கள், தமிழகத்தில் மூன்று துறைமுகங்கள் என நாட்டில், ஒட்டு மொத்த அளவில், 13பெரிய துறைமுகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவையனைத்தும், மத்திய அரசின் கப்பல் துறை அமைச்சகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இவைதவிர, குஜராத் (40), மகாராஷ்டிரா ( 53), தமிழகம் (15), ஆந்திரா (12 ) ஆகிய மாநிலங்களில் ஏராளமான சிறிய துறைமுகங்களும் உள்ளன.
சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால், உலகின் பல நாடுகளின் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டில் உள்ள துறைமுகங்களில் கையாளப்படும் சரக்குகள் சிறப்பான அளவில் அதிகரிக்கவில்லை. தற்போது, பல நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன. எனவே, இனி வரும் மாதங்களில் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணூர் துறைமுகம்:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாத காலத்தில், எண்ணூர் துறைமுகத்தில், 1.20 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் கையாளப்பட்ட சரக்குகளை விட, 43.94 சதவீதம் (83 லட்சம் டன்) அதிகமாகும்.
மதிப்பீட்டு காலத்தில், தூத்துக்குடி துறைமுகம், கையாண்ட சரக்குகளின் அளவு, 13.78 சதவீதம் வளர்ச்சிகண்டு, 2 கோடி டன்னிலிருந்து, 2.29 கோடி டன்னாக அதிகரித்துள்ள நிலையில், சென்னை துறைமுகத்தில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு, 7.43 சதவீதம் சரிவடைந்து, 5 கோடி டன்னிலிருந்து, 4.70 கோடி டன்னாக குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், கோல்கட்டாவில் உள்ள இரண்டு துறைமுகங்களும் கையாண்ட சரக்குகளின் அளவு குறைந்துள்ளது. இதில், கோல்கட்டா துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு 3.72 சதவீதம் சரிவடைந்து, 1.06 கோடி டன்னிலிருந்து, 1 கோடி டன்னாக குறைந்துள்ளது.
ஹால்டியா துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு, 8.39 சதவீதம் குறைந்து, 2.89 கோடி டன்னிலிருந்து, 2.64 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. மொத்தத்தில், இவ்விரு துறைமுகங்களும் கையாண்ட சரக்குகளின் அளவு, 7.14 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 3.95 கோடி டன்னிலிருந்து, 3.67 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.
பரதீப் துறைமுகம்:இவைதவிர, பரதீப் துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு, 1.26 சதவீதம் சரிவடைந்து, 4.61 கோடி டன்னிலிருந்து, 4.55 கோடி டன்னாக குறைந்துள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில், கையாண்ட சரக்குகளின் அளவு, 4.01 சதவீதம் அதிகரித்து, 5.57 கோடி டன்னிலிருந்து, 5.79 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
கொச்சி துறைமுகம்:அதே நேரத்தில், கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு, 13.44 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1.47 கோடி டன்னிலிருந்து, 1.67 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. புதிய மங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு 3.44 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.60 கோடி டன்னிலிருந்து, 2.64 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. ஜவகர்லால் நேரு துறைமுகம் (ஜே.என்.பி.டி.) கையாண்ட சரக்குகளின் அளவு, 2.96 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4.80 கோடி டன்னிலிருந்து, 4.95 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
இருப்பினும், மர்ம கோவா துறைமுகம், கையாண்ட சரக்குகளின் அளவு, 17.53 சதவீதம் சரிவடைந்து, 3.87 கோடி டன்னிலிருந்து, 3.19 கோடி டன்னாக குறைந்துள்ளது. மும்பை துறைமுகத்தில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு, 0.95 சதவீதம் குறைந்து, 4.55 கோடி டன்னிலிருந்து, 4.51 கோடி டன்னாக குறைந்துள்ளது. கன்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவும், 0.28 சதவீதம் குறைந்து, 6.87 கோடி டன்னிலிருந்து, 6.85 கோடி டன்னாக குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)