நாட்டின் துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 46 கோடி டன்நாட்டின் துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 46 கோடி டன் ... மும்பை ஏர்போர்ட் இன்று மூடல் மும்பை ஏர்போர்ட் இன்று மூடல் ...
ஏப்., 13க்குள் கொழும்பு - மதுரை நேரடி விமானம்:மிகின்லங்கா ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2012
10:22

மதுரை:""ஏப்., 13க்குள், கொழும்பு - மதுரை இடையே, மிகின்லங்கா விமான சேவை துவங்க வாய்ப்புள்ளது,'' என, அதன் தலைமை செயல் அதிகாரி கபிலா சந்திரசேனா, நம்பிக்கை தெரிவித்தார்.தொழில் வர்த்தக சங்கம் சார்பில், கொழும்புக்கு நேரடி விமானங்களை இயக்குவது குறித்து கலந்தாய்வுக் கூட்டம், மதுரையில் நேற்று நடந்தது. சங்கத் தலைவர் ஜெகதீசன் பேசியதாவது:தென் மாவட்டங்களைச் சேர்ந்த, 1.80 கோடி பேர், மதுரை விமான நிலையத்தை நம்பியுள்ளனர். தினமும், நூற்றுக்கணக்கான பயணிகள் இலங்கை, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்கின்றனர்.
சென்னை, திருச்சி விமான நிலையம் வழியாகச் செல்வதால், தேவையற்ற கால விரையம் ஏற்படுகிறது. வாரத்திற்கு, 1,200 பயணிகள் கொழும்பு செல்கின்றனர். தமிழ்ப் புத்தாண்டு பரிசாக, நேரடி விமானம் விட வேண்டும்.இவ்வாறு ஜெகதீசன் பேசினார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மிகின்லங்கா ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி கபிலா சந்திரசேனா பேசியதாவது :கொழும்பு - மதுரை நேரடி விமானம் இயக்க, அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. ஏப்., 13க்குள்ளாக கொழும்பிலிருந்து மதுரைக்கு மிகின்லங்கா ஏர்லைன்ஸ் விமான சர்வீஸ் துவக்க வாய்ப்புகள் உள்ளன.
மிகின்லங்கா ஏர்லைன்ஸ் ஊழியர்கள், சென்னை, திருச்சியில் உள்ளனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 28, மிகின்லங்கா ஏர்லைன்ஸ் இரண்டு விமானங்களை இயக்குகின்றன.
மிகின் ஏர்லைன்ஸ் தற்போது, காசி, வாரணாசிக்கு விமானங்களை இயக்குகிறது. பயணிகள் போக்குவரத்து மூலம் வருவாய் கிடைக்கிறது. மதுரைக்கு முதலில், வாரம் ஒரு முறையாக, விமானம் இயக்கப்படும். பயணிகள் வரவேற்பை பொறுத்து, அதன் சேவை அதிகரிக்கப்படும். கட்டணம் 2,500 ரூபாய் இருக்கும்.இவ்வாறு கபில சந்திரசேனா கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)