பதிவு செய்த நாள்
26 பிப்2012
15:25
புதுடில்லி: நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி, நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 4 சதவீதம் சரிவடைந்து 328 கோடி டாலராக (சுமார் ரூ.16,400 கோடி) உள்ளது. இது, 2011 ஜனவரி மாதத்தில் 340 கோடி டாலராக இருந்தது. முக்கிய சந்தைகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதற்கான தேவைப்பாடு குறைந்ததால் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது என நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில், மே மாதத்தில் நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி வளர்ச்சி 33 சதவீதம் என்ற அளவில் அமோகமாக இருந்தது. டிசம்பர் மாதத்தில் இந்த வளர்ச்சி விகிதம் 15 சதவீதமாக குறைந்தது. பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டதால் வைர, தங்க நகைகள் இறக்குமதியை மேலை நாடுகள் குறைத்துக் கொண்டதே இதற்கு காரணமாகும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவிலிருந்து தங்க, வைர ஆபரணங்கள் ஹாங்காங் மற்றும் ஐக்கிய அரபு குடியரசு நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளில் தேவைப்பாடு குறைந்து வரும் நிலையில் ஏற்றுமதியாளர்கள் பாரம்பரிய சந்தைகளை விடுத்து லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ரஷ்யா போன்ற புதிய சந்தைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|